எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக இணைய தளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் திரையுலகினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இலங்கை தூதரகத்தை மூடவேண்டும் என்றும் நடிகர் விஜய் உட்பட பல நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள்.
இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து, கறுப்புக்கொடி போராட்டங்களையும் நடத்தினர்.
தமிழ் திரையுலகம் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் நடிகைகள் காலை 10.30 மணிக்கு திரண்டார்கள். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் டைரக்டர்களும் வந்தனர். பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பங்கேற்றனர்.இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். அப்போது போலீசார் தடுத்தனர். லயோலா கல்லூரி எதிரில் போடப்பட்ட பந்தலில் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, சிவா, விக்ரம் பிரபு, ஸ்ரீகாந்த், வினய், ரித்தீஷ், பார்த்திபன், வையாபுரி, குண்டு கல்யாணம், தாமு, பட்டாபி, அனுமோகன், நடிகை குயிலி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், கலைப்புலி தாணு, இப்ராகிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், கே.எஸ்.ரவிக்குமார், பெப்சி விஜயன், நடன இயக்குநர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் டி.வி. நடிகர் நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து இருந்தனர். தாயை வணங்குபவன் தமிழன், தாயை பழிப்பவன் சிங்களவன், தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம் பத்து கோடி தமிழர்களின் புறநானூற்று தாய் அம்மா. குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை, உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே. ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு என்பன போன்ற வாசகங்கள் அதில் இருந்தன.
இலங்கையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர் நலனுக்காக குரல் கொடுக்கிறார். மத்திய அரசுக்கும் கடிதங்கள் எழுதுகிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கையை போர்க் குற்றவாளி நாடக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளார்.
இதற்காக முதல்வரை பற்றி இலங்கை அரசு இணையதளத்தில் அவதூறு வெளியிட்டு இழிவு செயல் செய்துள்ளது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க முதல்வர் முயற்சித்து வருகிறார். அது நடக்கும் இலங்கை தமிழர் மற்றும் மீனவர் பிரச்சினையில் புரட்சித்தலைவி எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. முதல்வரை அவமதித்த இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது: தமிழக மீனவர்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் முதலமைச்சரை இழிவுப்படுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்ட வேண்டும். இந்த விமர்சனம் தாயை விமர்சனம் செய்வதற்கு சமமான செயலாகும். இவ்வாறு விஜய் பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: முதலமைச்சரை விமர்சனம் செய்த ராஜபக்சேவின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமான, கேவலமான செயலாகும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அசிங்கப்படுத்திய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன். இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்.
ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: முதல்வரை அவமதித்த இலங்கை அரசுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த சாலைக்கு தமிழ்ஈழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார். ஆர்.கே.செல்வமணி டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, நாடுகளிடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தவே தூதரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நல்ல உறவை கெடுக்கும் செயலில் ஈடுபடும் இலங்கை தூதரகம் தேவை இல்லை. இதை அகற்ற வேண்டும். இலங்கை தூதரகம் உள்ள சாலைக்கு தமிழீழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும் போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல. நமது மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். இதை கொச்சை படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும் போது, முதல்–அமைச்சரை இலங்கை அரசு இழிவு படுத்தியதை கண்டிக்கிறோம். இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் நமது ராணுவ அதிகாரிகள் பங்கேற்க கூடாது என்றார்.
டைரக்டர் விக்ரமன் பேசும் போது, எத்தனையோ பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். தெரசாவை அன்னை தெரசா என்றோம். சோனியாகாந்தி அன்னை சோனியா என்று அழைக்கப்படுகிறார். புரட்சித் தலைவியை அம்மா என்று அழைக்கிறோம். அம்மா என்று அழைக்கப்படும் தலைவியை இலங்கை அரசு கொச்சை படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும். எனவே இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்றார்.
கலைப்புலி தாணு பேசும் போது, தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டோம் என்று தமிழ் திரையுலகமே ஒன்று திரண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. வருங்காலத்தில் தாயை பழித்ததற்கான தண்டனையை இலங்கை அனுபவிக்கும். அப்போது தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள் என்றார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:–
பல காலமாக தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு அடுத்ததாக தமிழக மீனவர்களை கொடுமைபடுத்தியது. இப்போது அதையும் தாண்டி முதல்–அமைச்சரை கொச்சைப்படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் செயல். இந்த பிரச்சினையில் புரட்சி தலைவி எடுக்கும் முடிவுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என்றார். நடிகர் கே.ராஜன் பேசும் போது, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமல்ல என்ற பா.ஜனதா அரசை எதிர்க்கிறோம் என்றார்.
போராட்டத்தை தொடர்ந்து இலங்கை துணை தூரகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். நடிகர், நடிகைகளை காண ஏராளமான பொது மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப