எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 19ந்தேதி (ஞாயிறு) திருச்சி வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 3வது முறையாக முதலமைச்சரானார். அன்று மாலையில் சென்னை கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா அங்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு அரை பவுன் தங்கம் இலவசம், பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றிட உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்றை உருவாக்கி அதற்காக ஒரு அமைச்சரையும் நியமித்தார்.
சமீபத்தில் நடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் கவர்னர் பர்னாலா உரையில் ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை, மின்தட்டுப்பாடு, மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.
இந்நிலையில் அரசு விழா மற்றும் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 19ந்தேதி பிற்பகல் ஜெயலலிதா திருச்சிக்கு தனி விமானம் மூலம் வருகிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் திருவரங்கம் தொகுதியில் 19ந்தேதி மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணிகள், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இரண்டாவது நாளான 20ந்தேதி(திங்கள்) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு தனது நன்றியினை தெரிவிக்க உள்ளார். அதன்பின்னர் 21ந்தேதி(செவ்வாய்) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமம் தோறும் சென்று வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 21ந்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா சென்னை செல்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக திருச்சியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வருவதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவரங்கம் தொகுதியில் ஜெயலலிதா கிராமம், கிராமமாக சென்றதைபோல் இப்போது நன்றி சொல்லவும் கிராமம் கிராமமாக செல்ல உள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திருச்சி அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற உள்ள அரசு விழா இடத்தை பார்வையிடுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏவுமான ஆர்.மனோகரன், திருச்சி எம்.பி.குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் மஹாலி, திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, திருச்சி போலீஸ் டி.ஐ.ஜி அமல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.nullனாட்சி, சந்திரசேகர், டாக்டர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, திருச்சி ஆர்.டி.ஓ.டாக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் அரசு விழா நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக சென்றனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலவாசல் பகுதி, மேலூர் செல்லும் சாலை ஆகிய இடங்களை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
விழாவில் கலந்து கொள்ளக்கூடிய பயனாளிகள், பொதுமக்கள், ஆகியோர்கள் சிரமமின்றி உட்கார்ந்து விழா நிகழ்ச்சியை காணும் வகையில் இடம் தேர்வு நடந்தது. இறுதியில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் அரசு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழா மேடை அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் உடனடியாக துவங்கப்பட்டது.
அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ பரஞ்சோதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் பெஸ்ட் பாபு, பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுப்பையா, இலக்கிய அணி தலைவர் கொய்யாத்தோப்பு செல்வராஜ், வரகனேரி சரவணன், கே.கே.நகர் வினோத், மாவட்ட ஆணழகன் கே.கே.நகர் கார்த்திகேயன், கேபிள் தினகரன், வீரங்கநல்லூர் வீரமணி, என்ஜினீயர் பரமசிவம், என்ஜீனீயர் முருகானந்தம், கேபிள் சேகர், அஸ்ரப் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் போலீசார் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் புதியதாக குடியேறியவர்கள், வெளியூர்காரர்கள், வீட்டினுள் தங்கி உள்ளார்களா? என்பதை அறிய குடும்ப அட்டையை வாங்கி சரிபார்த்தனர். ஸ்ரீரங்கம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல அரசு விழாவில் கலந்து கொள்ள 19ந்தேதி மாலை ஸ்ரீரங்கம் நகருக்கு வருகை தர உள்ள முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் புதிய பொழிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
காங்கிரஸ் சாதிக்க முடியாததை பாரதிய ஜனதா சாதித்துள்ளது : மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
30 Apr 2024மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில்