எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 16:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் முதல்வர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் க ம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. நெல்லை அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவை சேர்ந்த வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றதால் புவனேஸ்வரி ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் நகரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதா இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று அவர் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகருக்கு சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வேன் மூலமாக புறப்பட்டார். அப்போது வழிநெடுக பொதுமக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுக்கூட் ட மேடைக்கு செல்லும் வழியில் கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. வழிநெடுக சண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் முழங்க முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். சில இடங்களில் பொதுமக்கள் பால்குடம் ஏந்தியும் வரவேற்றனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்களது பாணியில் நடன மாடி முதல்வரை வரவேற்றனர். வழி எங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முதல்வரை வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். முதல்வரும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறே சென்றார். பின்னர் கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழா மலரையும் அவர் வெளியிட அமைச்சர் வேலுமணி அதை பெற்று கொண்டார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவை அங்கு திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அவர்களை பார்த்து இரு விரல் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர். இந்த கூட்டத்தில் முதல்வருக்கு அமைச்சர் வேலுமணி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார். முதல்வர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதாவது தோல்வி பயத்தால்தான் பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுகிறார்கள். ஆனால் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை பொறுத்தவரை மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் தயார் என்று குறிப்பிட்ட முதல்வர் பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்