முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட-தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - தென்மேற்கு பருவமழை கடலோர ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வடக்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரையில், மாலை நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கடலூர் மாவட்டம் தொழுதூர், பெரம்பலூர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., வேலூர் மாவட்டம் ஆலங்காயம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போரூர், சாத்தனூர் அணை, கடலூர் மாவட்டம் விருதாச்சலம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, விழுப்புரம் மாவட்டம் மைலம் ஏ.டபுள்யூ.எஸ். ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்