எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கென்சிங்டன் ஓவல், ஜூன் 27 - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரு டுவெண்டி -20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இளம் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வழக்கமான கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படவில்லை. கிறிஸ்கெய்ல் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து தொடர் நாயகன் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டதால் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டித் தொடரிலேயே சேர்க்கப்படவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்கெயிலை இந்திய தொடரில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் கிறிஸ்கெய்ல் சேர்க்கப்படவில்லை. தற்போது டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று முன்னலைபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரண்டாவது டெஸ்டிற்கான வீரர்கள் பெயரை அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட்டிலும் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல சங்கத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தேர்வுக்குழுவினர் கிறிஸ்கெய்ல் விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை.
முன்னதாக நடந்த வீரர்கள் தேர்வுக்குழு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் எர்னஸ்ட் ஹில்லையர் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்கெய்ல் கிரிக்கெட் வாரியம் குறித்து மரியாதைக்குறைவான வார்த்தைகளையும், வாரியத்தை பயமுறுத்துவது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நலனுக்கான அசோஸியேசனுக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே தொடர்கிறது. இதற்கிடையில் நாளை கென்சிங்டன் ஓவலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பெயர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சனும், அணியின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸனும் அறிவித்தனர். இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் விளையாடிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் உதவி கேப்டன் பிரண்டன் நாஷ் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 1 ரன்னையும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தார். இவருக்கு பதிலாக பார்படாஸ் தீவுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன் எட்வர்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பெயர்கள்:
டேரன் ஷம்மி(கேப்டன்), அட்ரியன் பரத், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, ராம்நரேஷ் சர்வான், ஷிவ்நரைன் சந்தர்பால், மார்லன் சாமுவேல்ஸ், கார்ல்டன் பாவ்(விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால், தேவேந்திர பிஷு, கீமர் ரோச், கிர்க் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஆவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.