முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்ப்பையும் மீறி பெண்ணை தூக்கிலிட்ட ஈரான்!

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

டெஹ்ரான், அக் 27 - ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம்பெண் தூக்கிலிடப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மரண தண்டனையை நிறைவேற்ற உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் ஈரான் அரசு அவரை தூக்கிலிட்டது.

ரேஹானே ஜபாரி என்ற அந்த பெண் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூக்கிலிருந்து ரேஹானேவை காப்பாற்றுவதற்காக இயங்கி வந்த பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தூக்கிலிடப்பட்ட தகவல் உறுதியாகி உள்ளது. வீடுகளின் உள் அலங்கார நிபுணரான ரேஹானே கடந்த 2007 ம் மோர்தெஸா அப்து லாலி சர்பண்டி என்ற உளவுத்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் ரேஹானோவை பாலியல் பலாத்காரம் செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப்புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானோவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. ஈரானின் திரைப்பட நடிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் ரேஹானோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். குத்தி கொல்லப்பட்ட அப்துலாலியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியிருந்தால் ஈரான் நாட்டு இஸ்லாமிய சட்டப்படி ரேஹானோ தூக்கிலிருந்து தப்பியிருப்பார். எனினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபரை பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும் வரை ரேஹானோவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என்றும் கூறி அப்துலாலி குடும்பத்தினர் அதற்கும் மறுத்து விட்டனர். இந்த சூழலில் ரேஹானோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ஈரானில் இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்