எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, பிப்.28 - இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது.
10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாக திகழ்வதால் இந்த போட்டி ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சச்சின், வீரேந்திர சேவாக் இருவரும் களமிறங்கினர். சேவாக் துவக்கத்திலேயே ஆன்டர்சன் பந்தில் இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை துவக்கினார். ஆனால் அவரது வழக்கமான பலவீன ஷாட்டினாலேயே தேவையில்லாமல் ப்ரேஸ்னன் பந்தை தொட்டுவிட, கீப்பர் ப்ரையர் ஒரு கையால் அபாரமான கேட்சை பிடித்து சேவாக்கை வெளியேற்றினார். சேவாக் 35 ரன்களை எடுத்தார். அப்போது இந்திய அணி 46 ரன்களை எடுத்திருந்தது. இதன் பிறகு காம்பீர், டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 180 க்கு உயர்ந்தபோது 51 ரன்கள் எடுத்திருந்த காம்பீர், ஸ்வானின் சுழல்பந்தில் அவுட்டானார். அடுத்ததாக யுவராஜ் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர் தனது 47-வது ஒரு நாள் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சினுக்கு உலகக் கோப்பையில் இது 5 வது சதமாகும். அணியின் எண்ணிக்கை 236 ஐ எட்டியபோது சச்சின், ஆன்டர்சனின் பந்தில் யார்டியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 120. 115 பந்துகளில் இந்த ரன்களை பெற்றார் சச்சின். இதில் 5 சிக்சர்களும், 10 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய யுவராஜ் மற்றும் தோனி, ரன் எண்ணிகையை 300 க்கு உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 305 ஐ அடைந்தபோது அரை சதம் அடித்திருந்த யுவராஜ் சிங், யார்டியின் பந்துவீச்சில் இயான் பெல்லால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதே ரன்னிலேயே கேப்டன் தோனியும் ப்ரேஸ்னன் பந்தில் அவுட்டானார். தோனி எடுத்த ரன்கள் 31. யூசுப் பதான் 8 பந்துகளில் 14 ரன்களையும், விராட் கோஹ்லி 5 பந்துகளில் 8 ரன்களையும், ஹர்பஜன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். ப்ரேஸ்னன் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த இறுதி கட்டத்தில் இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. இதனால் 49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ப்ரேஸ்னன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்டர்சன், ஸ்வான், யார்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்ட களமிறங்கியது இங்கிலாந்து. துவக்க வீரர்களாக பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ் ஆகியோர் இறங்கினர். இவர்கள் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். அணியின் எண்ணிக்கை 68 ஐ எட்டியபோது 31 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன், முனாப் பட்டேலின் பந்தில் அவராலேயே கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டிராட் கேப்டனுடன் ஜோடி சேர்ந்தார். டிராட் 16 ரன்கள் எடுத்த நிலையில் ப்யூஸ் சாவ்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இயான் பெல்லும், ஸ்ட்ராசும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளும் பறந்தன. இந்திய பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். எளிய வெற்றியை நோக்கி இங்கிலாந்து பயணம் செய்தது. இதில் பல கேட்ச் வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் வீணாக்கினர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோது, 43 வது ஓவரை வீசவந்த ஜாஹீர்கான், 69 ரன்கள் எடுத்திருந்த இயான் பெல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த கேட்சை பிடித்தவர் விராட் கோஹ்லி. இதையடுத்து அடுத்த பந்திலேயே அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஸ்ட்ராசையும் 158 ரன்களில் வீழ்த்தினார் ஜாஹீர். இவருடைய இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக களமிறங்கிய கோலிங்வுட்டையும், ஜாஹீர்கான் கிளீன் போல்டாக்க ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. இறுதியாக களமிறங்கிய இங்கிலாந்து பவுலர்களை அவுட்டாக்க மீண்டும் இந்திய பவுலர்கள் திணறினர். கடைசி ஓவரில் 14 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் பந்துவீச வந்த முனாப் பட்டேல் அந்த ஓவரில் 13 ரன்களை விட்டுத்தர இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்தது. இதனால் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது. இந்திய தரப்பில் ஜாஹீர் கான் 3 விக்கெட்டுகளையும், முனாப் பட்டேல், ப்பூஸ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்த ஸ்ட்ராஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கு தலா 1 புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் இவ்விரு அணிகளும் 3 புள்ளிகளை பெற்றுள்ளன
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.