முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு-ஜெயலலிதா இரங்கல்- நிதியுதவி

புதன்கிழமை, 6 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 6 - மதுரை மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் கரிசல்பட்டி விலக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு  முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு அவர்களது குடும்பத்துக்கு நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கரிசல்பட்டி கிராம விலக்கு அருகில் 21.6.11 அன்று மதுரையிலிருந்து சின்னமனூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தும், தேனியிலிருந்து நீராருபட்டிக்கு கட்டட தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடை விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பவுன்ராஜ் என்பவரின் குடும்பம் தமிழ்நாடு  விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே நிதியுதவி பெற்றுள்ளதால், அவரைத் தவிர மற்ற நான்கு குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்