எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - பாராளுமன்ற லோக்சபையில் இன்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மூலம் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று மரபுப்படி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மறுநாள் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
காரணம் இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முழுமையான முதல் ரயில்வே பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டங்கள் பற்றியும், நிதி ஒதுக்கீடு பற்றியும் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கு பிறகு கடந்த 6ம் தேதி தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் சென்னை, குமரி இடையே இரட்டை அகல ரயில் பாதை உள்ளிட்ட 10 முக்கிய ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். மெட்ரோ ரயில் திட்டம், பறக்கும் ரயில் திட்டம் போன்றவை தொடர்பாகவும், அதற்கு தேவையான நிதி தொடர்பாகவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்திற்கு இரண்டு ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி பல ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் மட்டும் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய ரயில்களும் விடப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்கள் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசும் போதிய நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசு நமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா என்பது இன்று தெரியவரும்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பட்ஜெட் தாக்கல் குறித்து துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். ரயில்வே துறை தற்போது நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அத்துறையை மேம்படுத்த விரும்பும் சுரேஷ் பிரபு பல்வேறு திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க கூடும். இந்த பட்ஜெட் மூலம் ரயில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காரணம், டீசல் விலை குறைந்தாலும் ரயில் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சர் ஏற்கனவே அறிவித்து விட்டார். மேலும் ரயில்வேயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி தேவைப்படுவதாகவும் ரயில்வேயிடம் நிதி பற்றாக்குறை இருந்து வருவதாகவும் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள சுமையை மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்கனவே கூறியிருந்தார்.
ஆகவே ரயில் கட்டணம் குறையாது என்பது நன்றாக தெரிகிறது. மேலும் ரயில்வே துறையில் தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பு நிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. பயணிகளுக்கு ரயில் நிலையங்களிலேயே உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அதாவது காங்கிரஸ் கூட்டணி அரசால் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் நிலுவையில் உள்ளன.
திருச்சி - நாகர்கோவில், செங்கல்பட்டு - திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி கிடக்கிறது. சென்னை - குமரி இருவழி பாதை அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. சென்னை ராயபுரம், தாம்பரம் ரயில் நிலையங்களை ரயில் முனையங்களாக மாற்றப்படும் என கடந்த 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் ரயில்வே சம்பந்தமாக சில திட்டங்கள் முடியாமல் பாதியிலேயே நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற இந்த பட்ஜெட்டில் அரசு கோரியபடி போதிய நிதி ஒதுக்கப்படுமா, புதிய ரயில்கள் விடப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. நாளை 27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 28ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை தொடர்பாக சில அறிவிப்புகளை அவர் வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.