எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்லாந்து - ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டத்தால் 151 ரன்னை போராடி நியூசிலாந்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் வெற்றி பெறும் முக்கிய அணிகளில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் நேற்று மோதியது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பலம் வாய்ந்த அணி என்று கருதப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் வெறும் 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து குறைந்த ஓவர்களிலேயே 151 ரன்னை எட்டி விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. அவர்களும் மிகப் பெரிய போராட்டத்துக்கு பிறகே ஆஸ்திரேலியாவை வெற்றி கண்டனர்.
உலக கோப்பையை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்தின் ஆக்லாந்து மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவை இவ்விரு அணிகளும், என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இதில், நியூசிலாந்து ஏற்கனவே இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தளவில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே அந்த போட்டியில் ஒரு புள்ளிதான் கிடைத்தது.
இவ்விரு அணிகளும் இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தொடங்கிய போட்டியில் மோதின. கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆடாத ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இப்போட்டிக்கு உடல் தகுதி பெற்றார். எனவே ஜார்ஜ் பெய்லி இப்போட்டியில் ஆடவில்லை.டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து விளாசிக் கொண்டிருந்தபோது டிம் சவுத்தி பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். 23 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன், வெட்டோரி பந்து வீச்சில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அப்போது ஆஸ்திரேலியா, 13 ஓவர்களில், 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன்பிறகுதான் ஆஸ்திரேலியாவின் சரிவு ஆரம்பித்தது. டேவிட் வார்னர் 34 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும், மேக்ஸ்வெல் 1 ரன்களிலும், கேப்டன், மைக்கேல் கிளார்க் 12 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். மிட்சேல் மார்ஷ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், ஜான்சன் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். ஓரளவு போராடிய விக்கெட் கீப்பர் ஹேடின் 43 ரன்களில் வீழ, 32.2 ஓவர்களிலேயே, 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. பாட் கமின்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஓரளவு வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்டது டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சுதான். 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெட்டோரி மற்றும் டிம் சவுத்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பலம்மிக்க ஆஸ்திரேலியாவை 151 ரன்களுக்குள் மடக்கிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி பேட்டிங்கை தொடங்கினர்.
தொடக்க வீரர்கள், மார்டின் குப்தில் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவருமே அதிரடி காண்பித்தனர். இருப்பினும் 11 ரன்கள் எடுத்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் பந்து வீச்சில் பட் கம்மின்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் குப்தில். மறுமுனையில் தாண்டவம் ஆடிய மெக்கல்லம், 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
ஆனால் மறுபக்கமோ விக்கெட்டுகள் மளமளவென சரிவடைய தொடங்கின. ரோஸ் டெலர் 1 ரன்னிலும், கிரான்ட் எலியட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆக 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து. இருப்பினும் கேன் வில்லியம்சன் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி நிதான ஆட்டம் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோரி ஆன்டர்சன் அவுட் ஆனார்.
அப்போது அணியின் ஸ்கோர் 131 ரன்களுக்கு, 5 விக்கெட் என்ற அளவில் இருந்தது. மேற்கொண்டு, 21 ரன்களே தேவைப்பட்டன.ஆனால் நிலைமை அப்போதுதான் தலைகீழாக மாறியது. அணியின் ஸ்கோர் 145ஆக இருந்தபோது டேனியல் வெட்டோரி, 146 ரன்களாக இருந்தபோது ஆடம் மில்னே மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 22.4 ஓவர்களில் நியூசிலாந்து 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் மில்னே, டிம் சவுத்தி ஆகியோர் ஸ்டார்கின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நியூசிலாந்து வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால் நியூசிலாந்தின் அதிருஷ்டம், அடுத்த ஓவரை சந்திக்கும் வாய்ப்பு வில்லியம்சனுக்கு கிடைத்தது. என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்சர் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார் வில்லியம்சன். 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மிரட்டினார் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க். இருப்பினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முடக்கிய டிரென்ட் பவுல்ட்டுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.