எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - நான் தவறாக பேசவில்லை என்று பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்ததை படித்து விட்டு கருணாநிதி முரசொலி நாளிதழில் தானே ஒரு கேள்வியை கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளதிலிருந்து அவரை யாராலும் திருத்தவே முடியாது என்று தா.பாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்ரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு சட்டப்பேரவை உறுப்பினர்கட்கு நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில் நான் பேசிய போது தமிழ்நாடு அரசின் மீது குற்றம் சாட்டி, குத்திக்காட்டிப் பேசியதாக சில தின, வார ஏடுகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் நேர்ந்ததால், 10.7.11 அன்று, பத்திரிகைகட்கு விளக்க அறிக்கை ஒன்றை எழுதியனுப்பினேன். அதைப் படித்துவிட்டு, கருணாநிதி 13.7.11 முரசொலியில், தானே ஒரு கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதியுள்ளார். ஜனசக்தியைத் தவறாமல் படித்து வருதற்காக நன்றி. பக்கம், பத்தி, வரிகள் உட்பட மேற்கோள் காட்டி, நான் பயந்து, மிரண்டு, மழுப்ப முயற்சிப்பதாக எழுதி முடித்துள்ளார்.
என் பேத்திக்குத் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி ஏழாம் தேதி நடைபெற்றது. திருமணம் ஜூலை 2ல் பாளையங்கோட்டையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவை, மரியாதை மரபுப்படி அழைத்தேன். அவரும் வரவேற்பில் கலந்து கொள்வதாகக் கூறினார். பாளையங்கோட்டைத் திருமணத்திற்கு வாழ்த்துச் செய்தியனுப்பியிருந்தார். ஏழாம் தேதி அவரது வருகைக்காக காவல்துறையும், அரசுப் பிரதிநிதிகளும் எனக்கு முன்பாகவே வந்து அவர்களது பணிகளில் மண்டபத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6.40 க்கு அவர் வரக்கூடிய நேரமும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பல்வேறு பொதுப்பணிகளோடு உடல்நலக்குறைவு என்பதால், வர இயலவில்லை என்பதை தனது செயலாளர்களில் ஒருவர் மூலம் நேரில் தெரிவிக்க அனுப்பியவர், அப்போதும் ஒரு வாழ்த்துச் செய்தியையும், மணமக்களுக்கு ஏதோ ஒரு பரிசுப் பொருளையும் அனுப்பியிருந்தார். அதை மணமக்கள் அறிவர். அவருடைய பிரதிநிதி நேரில் முதல்வர் ஜெயலலிதா வர இயலாமை குறித்து விளக்கிய பின்னரே சென்றார்.
இதனால் நானோ, என் குடும்பத்தாரோ, எங்களைவிட எங்கள் கட்சித் தோழர்களோ யாரும் ஏமாற்றம் அடையவில்லை. கோபப்படுவதற்கும் எதுவுமில்லை. பொதுவாழ்க்கையில் அதுவும் மாநில முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர், துக்கடமைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். நட்பு, உறவு எல்லாம் அதன் பின்னர் தான் வரவேண்டும். எனவே முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்காக நன்றி கூறினேன்.
ஆனால், ஆறாம் தேதி நான் தமிழ் மாநில அரசைக் கண்டித்துப் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா வராமல் புறக்கணித்துவிட்டார். அதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம் என்று எழுதிய பத்திரிகைகளில், டெக்கான் கிரானிக்கல் பத்திரிகை எங்களில் கட்சித் தோழர்கள் நடுநடுங்கி, கலங்கிப் போனதாக, படம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த நான் கருணாநிதி பாணியில் படித்தேன்ரசித்தேன்தூக்கி விசினேன் என்று கூறியிருக்கலாம்...
ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி எனக்கு ஒரு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது. எனவே, அந்தப் பொறுப்பிற்குரிய பிரதிநிதி என்ற முறையில், சொந்த நலனுக்காகப் பணியவும் முடியாது. சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் எந்தக் காரியத்தையும் செய்யவும் முடியாது; கூடாது.
ஆறாம் தேதி நான் பேசியதால், முதல்வர் ஜெயலலிதா கோபமடைந்து வரவில்லை என்பது சுத்த அபத்தம். அன்றைக்கு அவர் சிவக்குமார் மகன் திருமணத்திற்கும் செல்லாமல், வாழ்த்து மட்டும்தான் அனுப்பியிருந்தார்.
எனவே ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றுக்கு மரியாதை செய்தார் என்பது பொய். மறுநாள் சிவக்குமார் வீட்டிற்கு முதல்வர் போனது அவரது கால அவகாசத்தைப் பொறுத்தது.
எனவே, என் வீட்டிற்கு ஏன் வரவில்லை? எனக் கேட்கும் சின்னப்புத்தி என்னிடம் இல்லை. அவர் புறக்கணித்தார் என்பதும் பொய்.
ஆனால், விளக்கம் தர நானே முடிவு செய்தேன். எழுதினேன். ஏன் எனில், நான் பேசியதை நிருபர்கள் தவறாகப் பிரசுரித்து விட்டார்கள் எனப் பலர் மறுப்புக் கூறியிருப்பதைப் படித்துள்ளேன். அதை நான் பின்பற்றவில்லை.
நான் அவசரத்தில், வேகமாகப் பேசியதால் புரிவதில் தவறு நிகழ்ந்திருக்கிறது. அதிலும், கேட்டவர்கள் மீது பழி போடாமல், பேசியவன் தவறான கருத்துக்கு இடம் தராது பேசியிருக்க வேண்டும். எனவே நாமே விளக்குவது மேல் என்றே கருதினேன். ஆனால், கட்சி உறவு கெட்டுவிடும் என அதை மழுப்புவதாக கருணாநிதி அவரது சொந்த வியாக்யானத்தை எழுதியுள்ளார்.
நாமார்க்கும் குடியல்லோம் .... பணிவோம் அல்லோம் என்பதை அவரது ஆட்சி காலத்தில், அதிகாரத்தில் இருந்து எய்த எல்லா அம்புகளையும் நாங்கள் எவ்வாறு சந்தித்தோம் என்பதை அவர் அறிவார்.
கட்சியை சட்ட விரோதமாக அறிவித்து, நரவேட்டையாடிய காலத்திலும் அஞ்சாது நின்ற கட்சித் தோழர்கள் கதிகலங்கிப்போனதாக கிரானிக்கிள் எழுதியதை, விபரமறிந்த கருணாநிதி எழுதியிருப்பது, அவர் திருந்த மாட்டார் எவராலும் திருத்தவே முடியாது என்பதையே காட்டுகிறது.
நான் விளக்கமாக, தெளிவாக இருபொருள்பட இடம் தராது பேசியிருக்க வேண்டும் என்பதை பொதுவாழ்க்கையின் நேர்மை கருதி ஏற்கிறேன்.
ஆறாம் தேதி நிகழ்ச்சியில் நான் பேசியபோது, முந்தைய ஆட்சி மிகப்பெரும் கடன் சுமையை இன்றைய அரசின் மீது சுமத்தி விட்டுப் போயிருப்பதை, கடன் கணக்கோடு கூறினேன். நிர்வாகச் சீர்கேட்டால், தமிழ்நாடு நிலைகுலைந்து போயிருப்பதையும் குறிப்பிட்டேன்.
ஆட்சிப்பொறுப்புக்கு இப்போது பொறுப்பேற்றுள்ளவர்கள், வந்து 40 நாட்கள்கூட ஆகவில்லை. பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், முதல்வருக்குள்ள ஒரு பெரும் சிரமத்தை நாம் உணர வேண்டும்.
மந்திரிகளை நியமிப்பது, நீnullக்குவது என்பதை அவர் நினைக்கிறபடி செய்யலாம். அதை எத்தனை தடவையும் செய்யலாம். தடுக்க, நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருக்கிறார்கள், அவர்களை நினைத்தபடி nullநீக்கவோ, நியமிக்கவோ அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரிகள் மூலம்தான், திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இவற்றை மனத்திற்கொண்டு நாம், தேர்தலில் ஓரணியில் நின்ற கட்சிகள் கோரிக்கைப் பட்டியல்களை நீnullட்ட வேண்டும். நாமும் ஆளும்கட்சியின் ஒரு அங்கமும் அல்ல. எதிர்ப்பதற்காகவே உள்ள எதிர்க்கட்சியும் அல்ல. எனவே, நாட்டின் இக்கட்டான நெருக்கடிகளை உணர்ந்து நமது செயல்கள் அமையவேண்டும் என்றேன்.
மந்திரிகளை மாற்றுகிற வேகத்தில் நிர்வாக மாற்றங்களைச் செய்ய முடியாது எனக் கூறியதைத்தான், மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என நான் கூறியதாக எழுதிவிட்டார்கள். ஜனசக்தி நிருபர் கூட்டத்திற்கு வரவே இல்லை. பிற பத்திரிகைகளில் வந்ததை எடுத்துப் போட்டதால் கருணாநிதிக்கு ஒரு ஆயுதமாகக் கிட்டியுள்ளது.
நள்ளிரவில் தூக்கத்தில் தட்டி எழுப்பிக் கேட்டாலும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையைத்தான் முதல் கோரிக்கையாக வைப்பேன். அத்தகைய தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதை, உடனே பாராட்டித் தீர்மானம் போட்ட கட்சியின் பிரதிநிதி ஒன்றுமே நடக்கவில்லை என்று கூற முடியுமா?
என்னை விடுங்கள் நான் சாதாரண மனிதன். திகார் சிறைக்குச் செல்லும் தகுதி பெறாதவன். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆதரித்து, மத்திய அரசை வற்புறுத்தி தேசிய அளவிலான இயக்கத்துக்கும் அறைகூவல் விட்டு, நடத்திய பிறகு, மந்திரிகளை மாற்றியதைத் தவிர வேறு என்ன நடந்தது? என்று கேட்பேனா? கருணாநிதியே , நாங்கள் தெளிவாக உறுதியாக இருக்கிறோம்.
மூன்றரை ஆண்டுகளாக அரசு விளம்பரம் எதையும் தராது ஜனசக்தியை முடக்கி விட முயன்றீர்கள். அஞ்சி, மண்டியிட்டோமா?
அதே காலத்தில் உங்களது முரசொலி, தினகரன், குங்குமம் ஏடுகட்கும், சன் டி.வி. கலைஞர் டி.வி. ஆகியவற்றிற்கும் தமிழ்நாடு அரசு வழங்கிய கோடிகள் பற்றிய கணக்கும் தெரியுமல்லாவா?
தா.பாண்டியன் சாதாரண சாமான்ய மனிதன்தான். ஆனால், அவன் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரதிநிதி. அக்கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டவன்.
நேர்மைக்கும் nullநீதிக்கும் வணங்குவோம் எந்த அதிகாரத்திற்கும் எங்கள் தலை வணங்காது. நின்றவாறு வீரமரணத்தைச் சந்திப்போமேயன்றி, ஊழல் சகதியில் உழல மாட்டோன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 22 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.