எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை - ஜூலை.14 - மும்பையில் நேற்று மாலையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 21 பேர் பலியானார்கள் மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானுக்கு சென்று சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து பெரும் நிதியை பாகிஸ்தான் அரசு செலவழித்து வருவதோடு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடவும் உதவி வருகிறது. இந்தியா மீது நேரடியாக போர்தொடுத்தால் நாட்டை இழக்க நேரிடும் என்று கருதும் பாகிஸ்தான்,சீனாவின் உதவியோடு இந்தியாவில் குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி,புனே மற்றும் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மூலம் நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் பண நகரான மும்பை மீதுதான் அடிக்கடி தீவிரவாதிகளை தூண்டிவிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் பலர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். அதனையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தான் உதவியுடன் மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தையொட்டி பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது. மும்பையை தாக்கிய தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவு அதிகாரிகள் ஆகியோர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்து அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பும்படி கோரியது. இதையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. அப்படி இருந்தும் உலக நாடுகளின் நன்மையை கருத்தில் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியது. சமீபத்தில்தான் இஸ்லாமாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனையடுத்து டெல்லியில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இந்த மாதம் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிக்கேற்ப பாகிஸ்தான் நாடானது, அந்த நாட்டில் இயங்கி வரும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மீண்டும் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடிக்க செய்துள்ளது. இதில் 21-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. மும்பை நகரில் தாதர், ஓப்ரா ஹவுஸ், ஜாவேரி பஜார் ஆகிய 3 இடங்களில் தீவிரவாதிகள் நேற்று மாலையில் தொடர்குண்டுகளை வெடித்தனர். ஓப்ரா ஹவுசு மற்றும் ஜாவேரி பஜார் தெற்கு மும்பை பகுதியில் உள்ளது. மத்திய மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள தாதர் உள்ளது. இந்த 3 இடங்களிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அங்கு குண்டுவெடித்தால் உயிர்சேதம் அதிகமாக இருக்கும் என்று கருதிய தீவிரவாதிகள் அந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடித்துள்ளனர். இந்த தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி மும்பை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாதரில் குண்டுவெடித்ததில் 6 பேரும் ஜாவேரியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகிவிட்டதாகவும் ஜவேரி மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்கள் எடுத்துச்செல்லப்பட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். தாதர் பகுதியில் பல குண்டுகள் வெடித்தன. அதில் தாதரின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு குண்டு வெடித்தது. ஜாவேரி பகுதியில் மீட்டர் பாக்ஸில் வைத்து குண்டு வெடித்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முன்னதாக தகவல் வந்தது என்று முதலில் வந்த தகவல் கூறியது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார்நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மும்பைக்கு நேற்று இரவே வந்துவிட்டனர். அவர்கள் வெடிகுண்டு தடயங்களை சேகரிக்க தொடங்கிவிட்டனர். இந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.