எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி: நிலநடுக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய நேபாள எல்லைகளை ஓட்டியுள்ள மாநிலங்களிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதில் பீகாரை நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. பீகாரிலும் 7.9 ரிக்டர் அளவுக்கு பாதிப்பு உணரப்பட்டதாக தெரிகிறது. இதனால் பீகாரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பீகாரில் இறந்தவர்களின் எண்ணிகை 42ஆக அதிகரித்தது.64பேர் காயம் அடைந்தார்கள்.
பீகாரில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நிலைமைகள் குறித்து நிதிஷிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நில நடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு தினங்களுக்கு பிஎஸ்என் எல் தனது சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல் உத்திரப்பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு மாநிலங்களில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ரயில்வே நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேபாளத்தில் தவித்து வரும் பெண்கள் கால்பந்து குழுவினரை மீட்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் இந்தியாவைச் சேர்நஅத கால்பந்து குழு பெண்கள் 18 பேரை மீட்க கவனம் செலுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதில் இதில் நேற்று முன் தினம் 11.13 மணிக்கும், பின்னர் நேற்று அதிகாலை 4.46 மணிக்கும் உணரப்பட்டது. இLு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கடந்த முறையைப் போன்று சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இருந்த போதிலும் மீண்டும் தோன்றிய நில அதிர்வு காரணமாக வட மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மையத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் நேற்று பிற்பகலில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 237 பேர் படுகாங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை முதல்வர் அகிலேஷ் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இதற்காக 10 லாரிகள் மூலமாக தண்ணீர், உணவு பொட்டலங்கள், 10 லாரிகளில் பிஸ்கெட்டுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் விரைந்து சென்று நிவாரண பணிகளை விரைவுபடுத்தவும் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அவசர உதவி அழைப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் ,ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக் கை 13 ஆக அதிகரித்தது.நேற்று 8 வயது சிறுமி பலியானாள்.இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை அந்தமாநிலத்தில் அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.