எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 2 - ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (2.3.2011 புதன் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, மக்களை வாட்டி வதைக்கின்ற, மக்களை சுரண்டுகின்ற ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி ஒன்றியத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் உபயோகத்திற்காக 1500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து nullநீர் எடுக்கப்படுகின்றன என்றும், இதன் விளைவாக இந்தத் தொழிற்சாலையை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாகவும், 1ஙூ லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிnullநீரின்றி திண்டாடி வருவதாகவும், இந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறுகின்ற புகை காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி இருப்பதாகவும், சிமெண்ட ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்கு லாரிகள் அடிக்கடி வந்து செல்வதன் காரணமாக சாலைகள் பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், குறைவழுத்த மின்சாரம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், ஏற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகள், மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீnullர்ப் பிரச்சினை ஆகியவை தலைவிரித்து ஆடுவதாகவும் புகார்கள் வருகின்றன. மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலைமை இப்படி இருக்க, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஊர் சொத்துக்களை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். மணல் கொள்ளை, அரிசி கடத்தல், நில மோசடி போன்ற சட்டவிரோதச் செயல்கள் மூலம் வருகின்ற பணம் போதாது என்று, உலகமே வியக்கும் வண்ணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் ஊழல் புரிந்து இருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற டைனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சென்றிருப்பதும், சிவசங்கரனின் எஸ்.டெல் நிறுவனம் கலைஞர் டிவியை துவக்குவதற்கு கணிசமான தொகையை கொடுத்திருப்பதும், ஏர்செல் நிறுவனம் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன் டைரக்ட் டிவியில் 675 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளன.
இதிலிருந்து இந்த இமாலய ஊழலின் பின்னணியில் இருப்பவர்கள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள இவர்கள் யாரும் இதுவரை விசாரிக்கப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை. எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் பின்னணியில் உள்ள கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைமைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிமெண்ட் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (2.3.2011 புதன் கிழமை) காலை 10 மணியளவில், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே. செல்வம் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.