முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் பவானி சாகர் அணை திறப்பு முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து நேற்று    முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து