முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2015      இந்தியா

ஜம்மு,ஆக3, போர்நிறுத்த மீறல் செய்த பாகிஸ்தான் ராணுவம், ஜம்முவில் சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி மூத்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறியபோது, "பாகிஸ்தான் நேற்று காலை 10.40 மணியளவில் இந்திய நிலைகள் மீது 2  குண்டுகளை வீசியது. ஆனால் பதிலடி கொடுக்கவில்லை” என்றார்.

கடந்த 12 மணி நேரத்தில் 2-வது முறையாக பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. 

சனிக்கிழமையன்று ஆக்னூர் பகுதியில் ஜம்மு எல்லையில் தாக்குதல் நடத்தினர். கட்டுப்பாட்டு எல்லை அருகே ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் படைகள் 4 முறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளனர்.

ஜூலை மாதத்தில் மட்டும் 18 முறை பாகிஸ்தான் அத்து மீறியுள்ளது. இதில் 3 ஜவான்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டு, 14 பேர் காயமடைதனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து