எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.2 - வில்லிவாக்கத்தில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மீதும் அவரது பி.ஏ. காகரின் என்பவர் மீதும் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க உதவியதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் கட்டடம் கட்ட பினாமியாக இருந்து செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின் மீதும் தர்மா தோப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இது பற்றி விபரம் வருமாறு:-
வில்லிவாக்கத்திலுள்ள தர்மா தோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.15 கோடி மதிப்பு என்று குறைத்து காட்டி அறக்கட்டளை நிலத்தை ஆண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகார் ஓராண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது. இடையில் புகார் அளித்தவர்களை மிரட்டி நிலத்தை அபகரித்தும் வேலையும் நடந்தது.
இது பற்றி அறக்கட்டளை நிர்வாகிகள் முதல்ருக்கும், டிஜிபி ராமானுஜத்திற்கும் புகார் அளித்தனர். பின்பு முறைப்படி நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
மேற்கண்ட டிரஸ்டின் டிரஸ்டியாக நான் உள்ளேன். சென்னை, வில்லிவாக்கம், பெரம்பூர்-புரசை தாலுக்காவில் அடங்கிய 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் 1875-க்கு முன்பாக அரசாங்கத்தால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தர்மதோப்பு அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட பொது நிலம் ஆகும். டிரஸ்டிகளால் தர்மதோப்பில் சிவன்கோவில், அன்னதானம், மருத்துவசேவை, பசுசேவா, நிழல் தரும் மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சிறப்பாக நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தர்மதோப்பு சொத்தின் மீது தனிநபர்களுக்கு போலி பட்டா வழங்கிய பெரம்பூர்-புரசை தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தோம். அந்த மனு மீது போலீஸ் விசாரணை முடிந்து வெளிவந்தபோது கமிஷனர் அலுவலக வாசலில் காத்து இருந்த தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி பி.ஏ.காகரின், வாசு ஆகியோர் சாப்பிட வா போகலாம் என என்னை அழைத்து காரில் ஏற்றி கடத்தி சென்று தாசபிரகாஷ் எம்.சி.டி.எம். பள்ளி எதிரில் உள்ள தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபுவின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். காகரின் என்பவர் இந்த சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள், போலிபட்டா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளோம். 3 கோடி ரூபாய் வரை செலவு செய்து விட்டு டிரஸ்ட் கிட்ட சொத்து கொடுத்துட்டு சும்மா போயிடனுமா? வேணும்னா உனக்கு 1 ஷேர் கொடுத்து விடுகிறோம். வேண்டாம்னா இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுவிடு. இல்லையெனில் உன்னையும் உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் சாகடித்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
நான் உயிருக்கு பயந்து மேலும் தகவல்கள் சேகரித்தபொழுது பரிதி இளம்வழுதி பி.எ.காகரின் தலைமையில் பரிதி இளம்வழுதி உதவியுடன் இந்த மாபெரும் டிரஸ்ட் நில அபகரிப்பு மோசடி நடந்து உள்ளது தெரியவந்தது.
1875 முதல் தர்ம தோப்பு அறக்கட்டளை பட்டா நெ.19-ல் நாராயணசாமி ரெட்டி அறங்காவலர் என உள்ளது. 1911 முதல் 28.12.2004 வரை சி.நா.முனுசாமி ரெட்டி என்கிற தனி நபர் பெயரில், டிரஸ்ட் என்கிற வார்த்தை மறைக்கப்பட்டு பட்டா நெ.9 என மோசடியாக உள்ளது. 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் பட்டா 19-ல் அடங்கிய தர்மதோப்பு அறக்கட்டளைக்கு சொந்தமானது என 2008-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உதவியுடன் அவருடைய பி.ஏ.காகரின் என்பவர் 2001 என்கிற பட்டாவில் 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் உள்ளது என போலி பட்டா தயாரித்துள்ளார். இந்த பட்டாவை வில்லிவாக்கம் சார்பதிவாளரிடம் காண்பித்து 25.10.2004-ல் ஆவண எண்.3645 ஆப் 2004 ரிலீஸ் ஆவணத்தை 11 பேரின் கூட்டு சதியோடு பத்திரத்தை பதிவு செய்து அதில் சாட்சி கையெழுத்தையும் பரிதி அமைச்சர் பி.ஏ.காகரின் போட்டுள்ளார்.
பதிவு செய்து தோஷி பில்டருக்கு (5கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு) ரூ.5,34,65,790-க்கு 79 கிரவுண்ட் 500 சதுரஅடி நிலத்தையும், யாஷி மதி தோஷிக்கு ரூ.59,12,250-க்கு 8 கிரவுண்ட் 1832 சதுரஅடி நிலத்தையும் டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என விற்றுள்ளனர். தோஷி பில்டர் ஹர்ஷாத் வி தோஷி போலி பட்டாதாரர் இராமச்சந்திரனிடம் ஒரு பத்திரமும், தன் மனைவி யாஷிமதி தோஷி பெயரில் மற்றொரு பத்திரமும் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைதாள் செலுத்தி டிரஸ்ட் சொத்தை தனியார் சொத்து என பத்திரம் பதிவு செய்துள்ளார். இந்த 2 பத்திரங்களிலும் பரிதி இளம்வழுதி அமைச்சர் பி.ஏ. காரின், தி.மு.க. மாவட்ட பிரதி நிதி சிட்கோ வாசு, தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.
200 கோடி மதிப்புள்ள சொத்தை போலி பத்திரம் மூலம் ரூ.5 கோடியே34 லட்சத்து 65 ஆயிரத்து 790-க்கு பரிதி இளம்வழுதி பி.ஏ. காகரினிடம் ஷர்ஷாத் வி.தோஸி வாங்கியுள்ளார். 4.6.2008 தேதியில் ரூ.22 லட்சத்து 37 ஆயிரத்து 935-ஐ காசோலை எண்.150743, செளத் இந்தியன் பேங்க் திருவல்லிக்கேணி பிராஞ்ச், 10.10.2007 தேதியில் ரூ.2,66,010 காசோலை எண்.130380, ரூ.1,50,000 காசோலை எண்.334997 தேதி 2.10.2006 என்பதை தவிர பல செக்குகள் ஆகவும் ரொக்கமாகவும் ரூ.30,98,945-ஐ தோஷிபில்டர் தி.மு.க. அமைச்சர் பி.ஏ. காகரினுக்கு கொடுத்ததாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிதி இளம்வழுதி, பரிதி இளம்வழுதியின் பி.ஏ. காகரின், சிட்கோ வாசு, சிட்டிபாபு, போலி பட்டாதாரர் இராமச்சந்திரன், ஹர்ஷாத் வி தோஷி ஆகியோர் 47/ஏ-ன் கீழ் அரசுக்கு குறைவு முத்திரைத்தாள் வசூலிக்கும் நடவடிக்கையின் கீழ் உள்ள ஆவண எண்.234/2007 மற்றும் ஆவண எண்.235/2009 ஆகிய பத்திரத்தை பெரம்பூர்-புரசை தாலுகாவில் கொடுத்து இரண்டே மாதங்களில் எத்திராஜ் தாசில்தார், நாகராஜ் துணை தாசில்தாரிடம் போலி பட்டா பெற்றுள்ளனர்.
கடந்த 10.7.2010-ல் கத்தி, கம்பு, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டிரஸ்டின் 7 1/2, ஏக்கரில் 4 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை சாரதி தலைமையில் ரவுடிகளோடு ஆக்கிரமிப்பு செய்து டிரஸ்டிகளையும், பொதுமக்களையும் விரட்டி அடித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பினார்கள். காகரின், சிட்டிபாபு ஆகியோர் தர்மதோப்பு அலுவலகத்திற்கு வந்து இந்த சொத்து தோஷி பில்டர் பினாமி உதயநிதி ஸ்டாலினுக்கு செல்கிறது. நிலத்தை அளக்கும் போதும், காம்பவுண்ட் கட்டும்போதும் புகார் செய்யக்கூடாது என்றம், செய்தால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். தினமும் டிரஸ்டிகளின் வீடுகளின் மேல் ரவுடிகள் கல் எறிந்தார்கள். இதனால் உயிருக்கு பயந்து கொண்டு புகார் செய்யவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநதியின் குடும்பத்திற்கு இந்த சொத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதை தீர விசாரிக்கவும்.
27.12.2010 தாசில்தார்கள் மீது நடவடிக்கை கோரி மனு கொடுத்து இருந்தேன். புகாரினை பதிவு செய்யாததால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து அதற்கானபுகாரினை போலீசார் பதிவு செய்யகோரி உத்தரவும் பெற்றேன். உத்தரவு பெற்றும் தி.மு.க. ஆட்சியில் என்னுடைய வழக்கை ஆய்வாளர் சுகன்யா, துணை ஆய்வாளர் சபாபதி ஆகியோர் சரியான புலன் விசாரணை செய்யவில்லை. சரியான விசாரணை செய்திருந்தால் நான் கடத்தலுக்கும், கொலை மிரட்டலுக்கும் ஆளாகி இருக்கமாட்டேன்.
நில மோசடி தொடர்பாக அமைச்சர் பரிதி பி.ஏ. மீது கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் தெரிவித்து அனைத்து டி.வி.ளிலும் ஒளிபரப்பு ஆனது. மறுநாளே பரிதி இளம் வழுதி தன்னுடைய பி.ஏ. காகரினோடு முன்னாள் முதலமைச்ர் கருணாநிதியை சந்திப்பு நடக்கும்படியான ஒரு போட்டோ செய்தி அனைத்து டி.வியிலும், பத்திரிகைகளிலும் வந்துள்ளது. இதன் அடிப்படையில் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி உடந்தையாக இருந்துள்ளார் என வெட்டவெளிச்சம் ஆகிய உள்ளது. இதன் மூலம் போலீஸ் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்காதவண்ணம் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அமைச்சரின் பி.ஏ.காகரின் ஆகியோர் மிரட்டியும், என்னையும் மிரட்டி உள்ளனர். அமைச்சர் மற்றும் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்காத வண்ணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவளித்து உதவி செய்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. நீதி துறையையும், பத்திரபதிவு துறையையும், வருவாய்துறையையும் ஏமாற்றி போலி பட்டா, போலி பத்திரம், ஆள்மாறாட்டம், லஞ்சம், கொலை மிரட்டல், கடத்தல், முத்திரை தாள் மோசடி என செய்து பொது நல டிரஸ்ட் சொத்தை அபகரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் காகரின் இதற்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, பக்கபலமாக செயல்பட்ட பினாமி உதயநிதி ஸ்டாலின், போலிபட்டா தயாரிக்க உதவிய அரசு அதிகாரிகள் புவனேஸ்வரன் தாசில்தார், எத்திராஜ், துணை தாசில்தார் நாகராஜ் ஆகியோர் மீதும் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீதும் காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அபகரிகப்பட்ட டிரஸ்ட் நிலத்தை மீட்டு தரவேண்டும் என்றும், அரசு மற்றும் தர்மதோப்பு அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் 15 அடுக்குமாடி மருத்துவமனை கட்டி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும், உயிருக்கும், உடமைக்கும், டிரஸ்டிகளுக்கும், டிரஸ்டுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது புகாரில் ரங்காரெட்டி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.