எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர்.ஆக.2 - ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்வி நிறுவனத்திற்காக 12 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஏமாற்றி நிலத்தை பிடுங்கி கொண்டதாக திமுகவை சேர்ந்த தா.பழூர் ஒன்றியக்குழுத்தலைவர் க.கொ.க.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சின்னப்பன், வீ.முத்தையா, கனகவள்ளி. கே.ஆர்.சண்முகம் உள்ளிட்ட 6பேர் மீது அரியலூர் மாவட்ட எஸ்.பி. கண்ணப்பனிடம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தனலெட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனலெட்சுமி அரியலூர் மாவட்ட எஸ்.பி.கண்ணப்பனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் கிராமத்தை சேர்ந்தவரான ராமலிங்கம் என்பவரது மனைவி தனலெட்சுமி. எனக்கு தா.பழூர் கிராமம் சீனிவாசபுரத்தில் என் கணவர் சம்பாதித்த சொத்து 15 ஏக்கர் உள்ளது. இது எனது கணவர் சம்பாதித்த தனிப்பட்ட சொத்தாகும்.
எனது கணவரின் தாயாரான கனகவல்லிக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாது. அதலால், எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் கனகவல்லி ஆகியோரின் எதிர்கால ஜீவனாம்சத்திற்காக எனது கணவர் இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்தார். இந்த இடத்தை அவர்கள் விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் எனது கணவர் மறைவிற்கு பின்பு அவருக்கு உண்டான சொத்துக்களை எந்தவித பிரச்சனையும் இன்றி நான் மற்றும் எனது பிள்ளைகளுடன் விவசாயம் செய்து விந்தேன்.
இந்த நிலையில் கடந்த மே.மாதம் தா.பழூர் ஒன்றிய பெருந்தலைவர் க.சொ.க.கண்ணன் மற்றும் அவரசு மாமனார் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனது நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து மிக குறைந்த விலைக்கு எனது நிலத்தை கேட்டனர். நான் தற்போது விற்கவில்லை என்று மறுத்து விட்டேன். இதனால் எனக்கும் எனது மாமியார் கனகவல்லிக்கும் நிலப்பிரச்சனையை உருவாக்கி விட்டனர்.
மேலும் எனது மாமியாரை கையில் வைத்துக்கொண்டு தனது செல்வாக்கை பயன்படுத்தி க.கொ.க.கண்ணன் மற்றும் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனக்கு உண்டான சொத்தில் எனது மாமியாரை கூட்டாக சேர்த்து அதற்கான உத்தரவை வட்டாட்சியரிடம் பெற்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.சின்னப்பன் கடந்த 1.12.2010 அன்று தனது உடன்பிறந்த சகோதரர் ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு, 1 ஏக்கர் 5 லட்சத்துக்கு விற்க கூடிய சொத்தை 1 லட்சத்து கேட்டு, 12 ஏக்கர் நிலத்தை 12,46,250க்கு கிரையம் செய்து கொண்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்திலும் எந்த ஆவணங்களையும் பார்வையிடாமல் சார்பதிவாளர் விதிமுறைகளை மீறி ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் எனது மாமியார் கனகவல்லியை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அபகரிப்பு செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் க.கொ.க.கண்ணன், கே.கே.சின்னப்பன் ஆகியோர் அடியாட்களை கொண்டு என்னை குடும்பத்தோடு வெட்டி புதைத்து விடுவதாகவும், பெட்ரோலை ஊற்றி எரித்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து நான் ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளேன்.
எனவே எனது சொந்தை அபகரித்து கொண்டவர்களிடம் இருந்து மீண்டுத் தரவேண்டும் என்றும் மேலும் எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனலெட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கெனவே இவர்கள் மீது அரசு மருத்துவ செவிலியர்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள மனையை போர்ஜரி ஆவணங்கள் மூலம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் பெரிய வீடு கட்டியுள்ளது. நரிக்குறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசை ஏமாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருவரு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.