எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,அக.5 - 2012 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தமிழகத்தில் மின்வெட்டு முற்றிமாக நீக்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2011-2012 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து சில அறிவிப்புக்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 10,237 மெகாவாட்டாக இருந்தாலும், சராசரி மின் உற்பத்தி 8000 மெகாவாட்டாகவே உள்ளது. ஆனால் மின் தேவையோ 10,500 முதல் 11500 மெகாவாட்டாக உள்ளது. எனவே 2500 மெகாவாட் முதல் 3500 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு உள்ளது. இதனை வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதன் மூலமாகவும், காற்று மூலம் பெறப்படும் மின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், காற்று மூலம் பெறப்படும் மின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மின்தடை- கட்டுப்பாட்டு நடவடிக்கை முலமாகவும் சமாளித்து வருகிறோம். ஊரக, நகர்புறப் பகுதிகளில் மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப இந்த மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்.
2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தி திறன் 3280 மெகாவாட்டாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மின் விநியோகத்தில் கணிசமாக முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். மாநில அரசு, வடசென்னை மூன்றாம் நிலை, நான்காம் நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர் இணைப்பு,குந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். இத்திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும். 2011-2012 ஆம் ஆண்டில் 4800 கோடி ரூபாய் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9600 கோடி ரூபாய் செலவில் 1600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், 3600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4800 கோடிரூபாய் செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தித் திட்டம் ஆகியவை தொடங்கப்படும். இதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22800 கோடி ரூபாய் முதலீட்டில் 3800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்.
தமிழ்நாடு மின் உற்பத்திப் பகிர்மானக் கழகம் 40,000 கோடி ரூபாய் கடன் சுமையாலும், 38,000 கோடி ரூபாய் அளவிற்கான திரண்ட நட்டத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி நிலையைச் சீராக்குவதற்கு குறுகிய கால நடவடிக்கையாக நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், நீண்டகால அடிப்படையில் முழுமையாக நிதி நிர்வாகத்தைச் சீரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குறிப்பாக காற்று மூலம் பெறப்படும் எரிசக்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. காற்றாலை மூலம் நிறுவப்பட்ட மொத்த உற்பத்தித் திறன் 6007 மெகாவாட் ஆகும். இது இந்தியாவில் உள்ள மொத்த உற்பத்தித் திறனில் 47 விழுக்காடாகும். காற்று மூலமான எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு வதியாகவும், எரிசக்தியை மின் நிலைய இணைப்பு வரை அனுப்புவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். கடலோர காற்று எரிசக்தி உட்பட காற்று மூலமான மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க இந்த அரசு உரிய நடவடிக்கைக் கண்டறியும்.
ஆண்டுககு 20,000 தெரு விளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் 248 கோடி ரூபாய் செலவில் சூரிய சக்தியால் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இதில் மாநில அரசின் பங்கு 191.60 கோடி ரூபாயாகவும், மத்திய அரசின் மானியம் 56.40 கோடி ரூபாயாகவும் இருக்கும். 2011-2012 ஆம் ஆண்டில் 200 கிராமங்களில் 20,000 தெரு விளக்குகள் சூரிய எரிசக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதற்கென ஆகும் செலவான 49.60 கோடி ரூபாயில் மத்திய அரசு 11.20 கோடி ரூபாயும், மாநில அரசு 38.40 கோடி ரூபாயாக பகிர்ந்த கொள்ளும். இதேபோன்று 2001-2012 ஆம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 60,000 பசுமை வீடுகள் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கட்டப்படும். மத்திய அரசின் 48.60 கோடி ரூபாய் மானியம் உட்பட சுமார் 180 கோடி ரூபாய் செலவில் பசுமை வீடுகளுக்கு சூரிய எரிசக்தி வழங்கும் பணியினை தமிழ்நாடு எரிசக்கி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். அரசு ஏற்கனவே உறுதியளித்தவாறு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு- தனியார் பங்களிப்பு முறையில் திறந்த ஒப்பந்தப்புள்ள நடைமுறைகளைப் பின்பற்றி 50 மேகாவாட் உற்பத்தித் திறன் கொணஅட சூரிய ஒளியில மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.