எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கரூரில் தொற்று நோய் தடுப்பு குறித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு
பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 08.10.2015 மாண்புமிகு நாடாளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப.,அவர்கள் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதன் பாதிப்பு கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் சுற்றுப்புற சூழ்நிலையினால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊரகவளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டங்களில் எளிதாக பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொரு துறையின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் எனவும் பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமெனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கூட தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையிலும் கூட தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுடெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி அதன் மூலம் உயிர் சேதங்கள் அடைந்த நிலையிலும் தமிழகத்தில், எடுக்கப்பட்ட பல்முனை நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இன்னும் சிறப்பாக சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.
டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகரரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு ஈடுபாட்டுடன் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய் பரவாமல் தடுத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘எலிசா’ முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, இரத்த கூறுகள், மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சித்த மருத்துவத்துறையின் சார்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நிலவேம்பு குடிநீருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து தடுப்பு நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வது, அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரை மருந்துக்கள் போதிய அளவில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர்கள், கரூர் அருகிலுள்ள ஒத்தக்கடை கிராமத்தில் நடைபெற்ற வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டனர். தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் நீர்தேங்கும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். தொடர்ந்து கரூர் அரசு பொதுமருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் (குநஎநச றுயசன) சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சுகாதார உறுதிமொழியை மாண்புமிகு அமைச்சர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.தட்சிணாமூர்த்தி, , திண்டுக்கல் ஆட்சித்தலைவர்.டி.என்.ஹரிகரன்,., சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, செ.காமராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.கீதாமணிவண்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.அ.சந்திரநாதன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் மரு.கே.குழந்தைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல