எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.12 - தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்த இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவின் செயலுக்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரம் முடிவடைந்ததும், விதி 55ன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
இதன்மீது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்(தே.மு.தி.க.) பேசும்போது கூறியதாவது:
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபாயே கருத்து தெரிவித்திருக்கிறார். ஒன்றரை கோடி மக்கள் தொகை உள்ள இலங்கை நாட்டின் பிரதிநிதி ஒருவர், அதைவிட 5 மடங்குக்கும் அதிகம் மக்கள் தொகை உள்ள தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கூறுகையில், தமிழக முதல்வரின் சொந்த ஆதாயத்துக்காக இயற்றப்பட்டது என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேடும் நிலையில் தமிழக மக்கள் இல்லை.
போர் குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. சபை, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க காங்கிரஸ், இங்கிலாந்து ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அங்குள்ள மக்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது தான் வேடிக்கை.
1948ல் இருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அரச மரம்தான் அங்கே புத்தமரம். காந்தியடிகளின் அறப்போராட்டம் வெற்றி பெற்றது. இலங்கையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் அறப்போராட்டம் தோல்வி அடைந்தது.
மகிந்தா துரியோதனன் என்றால், கோத்தபாயே துச்சாதனன். இந்திய அரசு கடந்த காலங்களில் கடைபிடித்த போக்குதான் காரணம். இன அழிவு நடந்த போது இந்தியா துணை போனது தான் காரணம். இந்தியா துணை போக முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துணை போனார். எனவே, தான் இந்தியா ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நடைபெற்றுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் இந்திய அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
ஏ.செளந்திரராஜன்(சி.பி.எம்.): இலங்கையில் உள்ள குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கேட்டும் அதிகார பகிர்வு தர மறுக்கிறது இலங்கை அரசு. அதிகார பகிர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று கோத்தபயே கூறுகிறார். இந்திய அரசு நம்மை ஏமாற்றியதோடு, எல்லாரோயும் ஏமாற்றி வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டியில் கோத்தபயே, 3 விதமான கருத்துக்களை கூறியுள்ளார். 1. அரசியல் ஆதாயம், 2.தமிழக அரசும், இந்திய அரசும் இங்குள்ள மீனவர்களை அடக்கி வைக்கவேண்டும், 3.இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை, தாக்குதல்கள் இந்திய அரசுக்கு தெரியும் என்பது அந்த 3 கருத்துக்கள்.
மத்திய அரசு, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிய வேண்டும். அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்கைக்காக, நியாயத்திற்காக விளைவுகளை எதிர்பார்க்காமல் செயல்படுபவர் முதல்வர். எனவே, ஈழத்தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட, தமிழக மீனவர் நலன் காத்திட, வலுவான மக்கள் இயக்கத்தினை நடத்திட வேண்டும்.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோத்தபாயே, தரமற்ற வகையில் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, துணை தூதரகம் இனிமேல் சென்னையில் இயங்கக்கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசின் மீது கொலை வழக்கு போட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.கு.தமிழரசன்(இந்திய குடியரசு கட்சி): உரிமையின் அடிப்படையில் தீர்மானம் இயற்றினால், அதனை ஏளனம் செய்வது, கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வளவுக்குப்பிறகும் மத்திய அரசு மெளனமாக இருப்பது ஏன்? இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மட்டுமே வழி. எந்தவித ஆதாயமும் தேடாமல் நம்முடைய முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு நாம் அனைவரும் கேடயமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பிரதமர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோரை சந்தித்து இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் குழு டெல்லிக்கு செல்லலாம். அங்கு இந்த கருத்தை வலியுறுத்தலாம் என்றார்.
இவ்வாறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல