முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஏ.டிகிரி பட்டம் பெற்றது குறித்து மோடி மக்களை ஏமாற்றியுள்ளார்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி -   தனது பி.ஏ.டிகிரி பட்டம் குறித்து பிரதமர் மோடி மக்களை ஏமாற்றியுள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.  ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் பி.ஏ.டிகிரி பட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி பெற்ற டிகிரி பட்ட விவரங்கள் பொது மக்கள் பார்வைக்காக  வெளியிடப்பட வேண்டும்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி டிகிரி படித்ததற்கான அட்மிஷன் விவரங்கள் எதுவும் இல்லை. கடந்த 1975ம்ஆண்டு நரேந்திர குமார் மகாவீர் மோடி என்பவர்  படித்துள்ளார். பிரதமர் மோடி 10ம்வகுப்பு அல்லது 12ம் வகுப்புதான் படித்திருக்கிறார் ஆனால் அவர் போலியான பட்ட விவரங்களை இணைத்து மக்களை ஏமாற்றியுள்ளார்.

பிரதமராக ஆவதற்கு எந்த டிகிரியும் பெறவேண்டியது இல்லை.  குறைந்த படிப்பு உள்ள நபர்கள் அறிவுமிக்கவர்களாக உள்ளனர் அதற்கு உதாரணம் அன்னா ஹசாரே ஆவார். பிரதமர் மோடி பெற்றுள்ள டிகிரி பட்டங்கள் போலியானவை. ஆம் ஆத்மி  ஆர்வலர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் அனைத்து விவரங்களை ஆய்வு செய்த போதும் மோடியின் டிகிரி படிப்பு விவரங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்