எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 6–வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் மத்திய அரசின் சார்பாக மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ. தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 1984–ம் ஆண்டுக்குப்பின் அதாவது 32 ஆண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியாக ஒரு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அப்படியொரு வரலாற்று சாதனை நிகழ்த்தி ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். மக்களின் அமோக ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்ற ஜெயலலிதா மக்களின் பலத்த கரவொலி வாழ்த்துக்கிடையே 6–வது முறையாக முதல்வராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
28 அமைச்சர்களும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்த பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியேயும், கடற்கரை சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
முன்னதாக பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை 11–40 மணிக்கு தனது போயஸ் இல்ல தோட்டத்திலிருந்து புறப்பட்டார். 11–50 மணிக்கு விழா மண்டபம் வந்தார். அவருக்கு அரங்கம் அதிர வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்கள் புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று வாழ்த்து முழக்கம் எழுப்பி முதல்வரை வரவேற்றனர். முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமை செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேடையில் நின்று அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி அவர்களது வரவேற்பை முதல்வர் ஜெயலலிதா பெற்றுக் கொண்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். பின்னர் மேடையில் அவரவர் இருக்கைகளில் பதவி ஏற்க இருந்த அமைச்சர்கள் அமர்ந்தனர். பகல் 12 மணிக்கு கவர்னர் ரோசய்யா மண்டபம் வந்தடைந்தார். 12–02 மணிக்கு விழா நடக்கும் மேடைக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். கவர்னருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இதன்பின்னர் பதவி ஏற்க இருக்கும் 28 அமைச்சர்களையும் ஒவ்வொருவராக கவர்னருக்கு ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் கவர்னருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சுருக்கமாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைக்குமாறு கவர்னரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஆண்டவன் பெயரில் முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்து கொண்டார். பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் ‘அம்மா வாழ்க’ என்று நீண்டநேரம் வாழ்த்து முழக்கமிட்டு கொண்டிருந்தார்கள்.
பதவி ஏற்ற ஜெயலலிதா தனது இருக்கைக்கு வந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதன் பின் அமைச்சர்கள் 28 பேரும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். முதல் பிரிவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகிய 14 பேரும் நின்று பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்டதும் ஒவ்வொரு அமைச்சரும் ஜெயலலிதாவிடம் வந்து ஆசி பெற்று சென்றார்கள். கவர்னரிடமும் கைகுலுக்கி வாழ்த்து பெற்றனர்.
இரண்டாவது பிரிவில் உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, பி.பெஞ்சமின், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் எம்.மணிகண்டன் , எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 14 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.28 அமைச்சர்களும் ஆண்டவன் மீது உறுதி கூறி பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்து கொண்டனர்.
அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்களும் ஒவ்வொருவராக முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஆசி பெற்றார்கள். கவர்னரிடமும் வந்து வாழ்த்து பெற்றார்கள். 12–22 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தது. இறுதியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. 20 நிமிடத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னருடன் பதவி ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்களும் குழு (குரூப்) புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டால் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாகும். ஆனால் இப்போது 2 பிரிவாக அமைச்சர்கள் வரிசையாக நின்று ஒரே நேரத்தில் பதவி ஏற்றுக் கொண்டதால் 17 நிமிடத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவு பெற்றது.
முன்னதாக பதவி ஏற்பு விழா மண்டபம் முக்கிய பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது. இந்த விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர். மண்டபத்திற்கு வெளியேயும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அவர்கள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை காண பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனை மக்கள் பார்த்து முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றபோது கைதட்டி வாழ்த்து கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.