எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலி, வாழ்த்துக்களுடன் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக 2–வது முறையாக ஆட்சியை பிடித்தது இப்போதுதான். அந்த வரலாற்று சாதனையை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி இருக்கிறார்.
6–வது முறையாக முதல்வராக பதவி ஏற்றும் ஜெயலலிதா சாதனை புரிந்திருக்கிறார். கடந்த 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முதல்வருடன் 28 அமைச்சர்களும் அன்றைய தினம் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார். அவர் 23–ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்நிலையில்
15-வது சட்டமன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், தற்காலிக சபாநாயகர் செம்மலை, சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து நேற்று 15-வது தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. சட்டசபை மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்ட சபையில் உள்ள அனைத்து தலைவர்கள் படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வந்து அமர்ந்தனர். அமைச்சர்கள் அனைவரும் முதல் மற்றும் 2–வது வரிசையில் அமர்ந்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா காலை 10.53 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அவர் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல்வர் ஜெயலலிதா தனது இருக்கையில் 10.54 மணிக்கு அமரும் முன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை சபைக்குள் வந்தார்.
‘‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந்துறும்’’
என்ற திருக்குறளை படித்த அவர், ‘‘என் மக்களை உயர்த்துவேன் என்று மிகுந்த மன உறுதியுடன் முயற்சி செய்யும் ஒருவருக்கு தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்து அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று திருக்குறளுக்கான பொருளையும் சொன்னார்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் அவர் தலைமையின் கீழ் தமிழ்நாட்டை உயர்வடைய செய்வோம் என்றும் தற்காலிக சபாநாயகர் செம்மலை பேசினார். இதன் பின்னர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் தொடர்ந்து சபை நிகழ்ச்சியை செம்மலை நடத்தினார்.
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் பேரவை அலுவல்களை ஏற்று நடத்தும் வகையில் கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினராக அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இன்று (நேற்று) இங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திடுகிறேன் என்று கூறி எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்ததற்கான பதிவேட்டில் செம்மலை கையெழுத்திட்டார்.
முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் துணை சபாநாயகர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி எடுத்து கொள்வர். உறுதிமொழியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எடுத்து கொள்ளலாம். உறுதிமொழி வாசகம் மட்டுமே படிக்க வேண்டும். உறுதிமொழியை உளமாற உறுதி என்றும், கடவுள் அறிய என்றும் வாசகம் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை படித்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உறுதிமொழி எடுக்கும் கடமை புனிதமானது. எனவே அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் செம்மலை கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுப்பதற்கு முதலாவதாக முதல்வரை அழைக்கிறேன் என்று செம்மலை கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.
சபாநாயகர் இருக்கைக்கு முன் சிறிய சாய்வு மேஜையுடன் மைக் வைக்கப்பட்டிருந்தது. தனது இருக்கையில் இருந்து அங்கு வந்து எம்.எல்.ஏ.வாக முதல்வர் ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். காலை 11.09 மணிக்கு அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சட்ட பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா என்னும் நான், சட்ட முறைப்படி நிறுவப் பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார். பின்னர் எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சபாநாயகர் முன்பு எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் இ.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.பி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, பா.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 28 அமைச்சர்களும் எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்தார்கள். அனைவரும் கடவுள் அறிய என்று உறுதிமொழி எடுத்தனர்.
இதன் பின்னர் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் பதவி ஏற்றார்கள். இதனை அடுத்து முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உறுதிமொழி எடுத்தனர். பகல் 11 மணிக்கு தொடங்கி பதவியேற்பு விழா பிற்பகல் 2.22 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 230 எம்.எல்.ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.