எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.ஆங்காங்கே மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து தொகுதி முழுவதும் தொண்டர்களுடன் சென்று மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.கடந்த 23–ந்தேதி அன்று 6–வது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயலலிதா. 6–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற சாதனையையும் படைத்தார்.
ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவரிடம் ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள். இது அவர் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள்– சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா நிறைவேற்றினார். மக்கள் மனநிறைவு மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோன்று 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஏராளமான வாக்குறுதிகளை ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.23–ந்தேதி அன்று பதவி ஏற்றவுடன் சென்னை கோட்டைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றார்.முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல், மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12 மணியாக மாற்றம், நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ.5,780 கோடி விவசாயகள் பயிர் கடன் தள்ளுபடி செய்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.பதவி ஏற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.ஜெயலலிதா ஆட்சி அமைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அ தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி மூலமும், அறிக்கைகள் மூலமும் நன்றி தெரிவித்தார்.தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு அண்ணா தி.மு.க. வேட்பாளரும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரும், அ தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி உள்ளனர்.‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.விற்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் எனது நன்றி உரித்தாகுக.
அ தி.மு.க. வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை எனக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல எனது தலைமையிலான புதிய அரசு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதிமொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்கள்.முன்னதாக அந்த பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார்கள்.பதவி ஏற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதா 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றியதையும் மக்களிடம் எடுத்து சொன்னார்கள்.
அமைச்சர் பா. பென்ஜமின்
அதிமுக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளாரும் அமைச்சருமான் பா. பென்ஜமின் 92 வது வார்டு உட்பட்டஅனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் உடன் கா.சு.ஜனார்த்தனம் , கே.கபாலி, துண்டலம் பாபு, ராமாபுரம் சேகர், தொகுதி செயலாளர் ஜீவானந்தம் எம்.சி, லக்கிமுருகன், பாரத் எம்சி , தேவதாஸ் எம்சி , மற்றும் தென்றல் குமார், ராஜன் , பிரபு ஜோயல் பலர் கலந்து கொண்டனர்
பா.வளர்மதி
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 109, 110, 112 ஆகிய வார்டுகளில் அவர் வீதி வீதியாக சென்றார். பாரதீஸ்வரர் காலனி, ஈஸ்வர் காலனி, சிவன் கோவில் தெரு, டிரஸ்ட்புரம், வரதராஜபேட்டை, சுபேதார் கார்டன், சூளைமேடு சாலை, பஜனை கோவில் தெரு, அப்துல்லா தெரு, அப்பாசாமி தெரு உட்பட பல்வேறு தெருக்களில் சென்று வாக்காளர்களுக்கு பா.வளர்மதி நன்றி தெரிவித்தார். அவருடன் ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., நடிகர் ஜெயகோவிந்தன், புஷ்பாநகர் ஆறுமுகம் எம்.சி., மாவட்ட குழு தலைவர் எஸ்.சக்தி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், நுங்கை மூர்த்தி, பொன் செ.குமார், வரதை முத்துபரணி, எம்.சேகர், பி.ராமமூர்த்தி, நுங்கை விவேக், பிகாலனி எழில், முனிஸ், மன்சூர் அகமது, என்.எஸ்.மணி, ராஜு, ஐயப்பன், அன்சர் உட்பட ஏராளமானபேர் உடன் சென்றார்கள்.இதுபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.