முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வேற்றி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் ரோஜா மனு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நகரி தொகுதியில் ரோஜா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ராயுடு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென ரோஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, இரு தரப்பு வாதங்களையும் ஒரே நாளில் கேட்பதாக நீதிபதி கூறினார். இதற்கு ஒப்புக் கொள்ளாத ரோஜா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் ஜூன் 6-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்