எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இந்த அணை தொடர்பாக உள்ள பிரச்சினையை தமிழக அரசுடன் பேசி தீர்ப்போம் என்று கேரளாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த 16ம்தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது. அந்த கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்தது. இதனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் பதவியேற்றார். அவர் கள் இறக்கும் ஏழை தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் முதல் முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்றதும் பினராயி விஜயன் தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் கேரள அதிகாரிகள் குழுவும் சென்றது.
டெல்லியில் பிரதமர் மோடியை பினராயிவிஜயன் சந்தித்தார். அப்போது பினராயிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமரிடம் கேரள மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றிய கோரிக்கை மனுவையும் பினராயி விஜயன் வழங்கினார். அந்த மனுவில், கேரளாவில் முக்கிய தொழிலாக ரப்பர் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரப்பர் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். சுற்றுலா, ஆயுர்வேதம் போன்றவை வளர்ச்சி பெற புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்களை பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அவர் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் கேரள அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு, பேட்டி அளித்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,
புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக பிரதமர் , ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தேன். எங்களின் கோரிக்கைகளையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். 5ஆண்டுகளில் கேரளாவை முதன்மை மாநிலமாக மாற்ற முழு முயற்சி எடுப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவோம். கேரளாவில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது . எந்த வித பிரச்சினையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை தொடர்பாக உள்ள பிரச்சினைக்கு தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காண்போம். முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற நிபுணர்கள் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே அந்த அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முரண்பாடுகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. அதேசமயம் முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளாவில் உள்ள பொது மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். அணை பகுதியில், ஏராளமான ஏழை குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது. தண்ணீர் எல்லோருக்கும் தேவையாக உள்ளது. எனவே முல்லை பெரியாறு அணை நீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படும்வகையில் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது கேரளாவில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும் புதிய அணை கட்டப்போவதாகவும் பிரச்சினையை கிளப்பியது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. புதிய அணையை கட்ட மாட்டோம் என்று அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.