எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 7 - கூட்டணி பிரச்சினையில் காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் தி.மு.க.வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து காங்கிரஸ் தரப்பில் யாரும் பேச வரவில்லை என்று டி.ஆர்.பாலு விரக்தியுடன் கூறினார். காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கியது. கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒதுக்கீட்டு கணக்கின்படி காங்கிரசுக்கு 51 இடங்களே ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரை கொண்ட ஐவர் குழுவினர் சட்டப்பேரவை தேர்தலில் 90 தொகுதிகள் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால் தி.மு.க. தரப்பில் கடந்த முறை 48 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். தற்போது 51 தொகுதிகள் தருகிறோம் என்று கூறினர். பின்னர் இந்த எண்ணிக்கை 53 ஆகி பின்னர் 55 ஆகி, 58-ல் வந்து நின்றது. இரு முறை இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு முடியாததால் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கருணாநிதியிடம் பேசி விட்டு சென்றார். அப்போது 60 தொகுதிகள் என்று முடிவாகியது. அதன் பிறகும் காங்கிரஸ்- தி.மு.க. உடன்பாட்டில் சிக்கல் நீடித்தது. (இந்நிலையில்தான் காங்கிரசை அலட்சியப்படுத்திவிட்டு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. இது காங்கிரசை மேலும் கோபமடைய செய்தது.) இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த காங்கிரஸ் தரப்பினர் பின்னர் டெல்லியிலிருந்து 60 சீட்டை 63 ஆக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தனர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியே 4-ந் தேதி இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விரக்தியுடன் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் குறிப்பிடும் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. தரப்பில் அதன் தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க தி.மு.க. உயர்நிலை மட்ட குழு கூட்டத்தை சென்னையில் 5-ந்தேதி கூட்டினர். அதில் மத்திய அரசிடமிருந்து தி.மு.க. மந்திரிகள் விலகுவதாகவும், வெளியிலிருந்து பிரச்சினையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து எந்த தகவலும் தி.மு.க.விற்கு வரவில்லை. அதோடு தி.மு.க.வின் இந்த மிரட்டலை காங்கிரசார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று தி.மு.க. அலுவலகத்திற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நாளை (இன்று) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் அளிப்பார்கள். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதுகுறித்து டெல்லியில் இருந்தும் இது வரை யாரும் பேச வரவில்லை என்றார்.
நேற்று காலை தி.மு.க. தேர்தல் குழுவினருடன் பா.ம.க. தலைவர் கோ.க.மணி தலைமையில் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பா.ம.க. தி.மு.க. அணியில் சேர்ந்து போட்டியிடும் 31 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் வழங்கினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த பா.ம.க. தலைவர் கோ.க.மணி கூறுகையில், காங்கிரஸ் அல்லாமல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
முன்னதாக தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினார்கள். அறிவாலயத்தில் கூடியிருந்த தி.மு.க.வினர் காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தி.மு.க. தொண்டர்கள் தொடர்நது கோஷமிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.