முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக்கூட்டம் : கலெக்டர் சு.கணேஷ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ்,தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டு வட்டி

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து கூறியதாவது:நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் உழவர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நகைகளை ஈடு வைத்து கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு கடன் பெற்றவர்களிடமிருந்து மாதாந்திர முறையில் கூட்டுவட்டி முறையில் கணக்கிட்டு பணம் வசூல்செய்யப்படுவதாகவும், மீளப்பெறாத நகைகளை கடன்தாரர்கள் முன்பு ஏலம் விடாமல் பிற பகுதிகளில் ஏலம் விடப்படுவதாக நுகர்வோர்களிடமிருந்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் சங்கத்திற்கு புகார்கள் வரப்பெற்றது. மேலும் இப்புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு நுகர்வோர் அமைப்பு கொண்டு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நுகர்வோர் அமைப்புகள், வங்கியாளர்கள், முத்தூட், கொசமற்றம், மணப்புரம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் நிதிநிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியரகத்தில் சமர்ப்பிக்க சம்மந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நீதியியல்) கண்ணாகருப்பையா, புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தமிழ்செல்வன், மாவட்ட நுகர்வோர் சங்கத்தலைவர் தனவேலு, பொதுச்செயலாளர் வேலவேந்தன், நிதிசார் கல்வியியல் ஆலோசகர் முத்து (ஐ.ஓ.பி), பல்வேறு தனியார் நிதிநிறுவனங்களின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்