எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா பற்றி அவர் முடிவெடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார். சென்னையில் தி.மு.க. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-
கேள்வி: புரட்சி பாரதம் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளதா?
பதில்: தி.மு.க. தனித்து நிற்கிறது.
கேள்வி: 3 மேயர் வேட்பாளர் பெயர் அறிவிக்கவில்லையே?
பதில்: பிறகு அறிவிக்கப்படும்.
கேள்வி: தனித்து போட்டியிடுகிறீர்களே, வெற்றி வாய்ப்பு இருக்குமா?
பதில்: வெற்றி வாய்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனித்து நிற்கிறோம்.
கேள்வி: எதை வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்கள்?
பதில்: உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள், மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை முக்கிய குறிக்கோளாக எடுத்து பிரச்சாரம் செய்வோம்.
கேள்வி: தனித்துப் போட்டி எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படுமா?
பதில்: அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாவிட்டாலும், அந்தந்த வாய்ப்புகளுக்காக ஏற்றவாறு பொது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளப்படும்.
கேள்வி: காங்கிரசுக்கும் இது பொருந்துமா?
பதில்: எல்லோருக்கும் இது பொருந்தும்.
கேள்வி: சில காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. கூட்டணியில் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்களே?
பதில்: மகிழ்ச்சி இருபக்கமும் இருக்கின்றது.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஜெயலலிதா கூறி உள்ளார். இதனால் சிதம்பரம் ராஜினாமா பற்றி?
பதில்: இப்போது அது விவாத பொருளில்லை.
கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படுமா?
பதில்: நடத்தப்படும் என்று ஆணையர் சோ.அய்யர் கூறி உள்ளாரே.
கேள்வி: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா செய்ய வலியுறுத்துவீர்களா?
பதில்: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும் முடிவெடுக்கவில்லை என்று கூறினீர்களே?
பதில்: நான் அவ்வாறு கூறவில்லை.
கேள்வி: 2ஜி விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் ப.சிதம்பரத்திற்கும், பிரதமருக்கும் தெரியும் என்று ராசா கூறியுள்ளாரே?
பதில்: ஒவ்வொரு முறையும் 2ஜி ஒப்பந்தம் போடப்படும்போதும் முடிவுகளை கலந்தாலோசித்துவிட்டே எடுத்தோம் என்ற எண்ணத்தில் ராசா கூறியிருக்கலாம்.
இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.
பேட்டிக்கு பின் 7 மாநகராட்சி வேட்பாளர்கள் மற்றும் 86 நகராட்சி தலைவர்களுக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியம் வேட்பாளராகவும், வேலூர்- ராஜேஸ்வரி, ஈரோடு- செல்லபொன்னி மனோகரன், திருப்பூர்- செல்வராஜ், கோவை- கார்த்திக், நெல்லை- அமுதா, தூத்துக்குடி- பொன் இனிதா ஆகிய 7 பேர் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார்.
காலையில் முதலில் கருணாநிதி பட்டியல் வெளியிட இருந்தார். ஆனால் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் வேட்பாளர் தேர்வில் கடும் பிரச்சினை ஏற்பட்டதால் கருணாநிதி மாலை 6 மணிக்கு பட்டியலை வெளியிட்டார். அதிலும் நெல்லை, மதுரை இழுபறி காரணமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
காங்கிரசுடன் கூட்டணியில்லை, தனித்து நிற்கிறோம் என்று அறிவித்த கருணாநிதி இப்போது, தேவையான இடங்களில் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற புதிய கண்டுபிடிப்பை அறிவித்து காமெடி பண்ணினார். காங்கிரசுடனும் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் உண்டு என்று கூறியதன் மூலம் தி.மு.க.வினர் மத்தியில் இப்போது கூட்டணி உண்டா, இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டி உண்டு, ஆனா இல்லை என்று வடிவேல் காமெடி பாணியில் தொண்டர்கள் பேசி சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல