எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தில், சிறப்பு சிகிச்சைகளுக்கு அளிக்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.1.50 லட்சத்திலிருந்து, 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறையில், ஏழை எளிய மக்களுக்காக என்னற்ற நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ காப்பீட்டு அடையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேருக்கு சிகிச்சை
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும், குறிப்பிட்ட 77 நோய் வகைகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் 17.60 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் 3,615 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு, 7.11 லட்சம் பயனாளிகளுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அறுவை சிகிச்சை
இத்திட்டத்தில் பெற்ற நிதியிலிருந்து, அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், மாநில அரசின் பங்களிப்பு 35 கோடி ரூபாயுடன் தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்கள் எவ்வித செலவும் செய்யவேண்டியதில்லை. இதுவரை 4,300 நபர்கள், 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை 10-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 16.06.2016 அன்று நிகழ்த்திய உரையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு இணங்க, இதற்கான அரசாணை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த திறந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு மிகக் குறைந்த பிரிமியம் 699 ரூபாய் என்று குறிப்பிட்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு நிறுவனம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 11ம் தேதி முதல் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு 1,270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
312 சிகிச்சை முறைகள்
11-ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் குடியேறி ஆறு மாதத்திற்குமேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மேலும் மின்னனு முறையில் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து அச்சடித்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் உடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து சிகிச்சை பெறலாம்
பயனாளிகள், தற்போதுள்ள திட்டத்தில் உள்ளது போலவே இத்திட்டத்திலும் தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னனு அட்டை உபயோகித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், சிகிச்சை பெறுவதில் வழிகாட்டுதலுக்கும், சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களை சரி செய்யவும் மற்றும் புகார்களுக்கும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம். தேவையிருப்பின், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் உள்ள மாவட்ட கண்காணிப்பு மற்றும் குறை தீர்த்தல் செயற்குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். செயற்குழு முடிவின் மீது மேல் முறையீடு ஏதும் இருப்பின், தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்ட, திட்ட இயக்குநர் தலைமையில் உள்ள மாநில கண்காணிப்பு மற்றும் குறைதீர்த்தல் செயற்குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம்.
பொதுமக்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் எந்த செலவுமின்றி, கட்டணமில்லாமல் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.