எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, செப்.- 28 - சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிரினிடாட் டொபாக்கோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி -20 கிரிக்கெட் போட்டியில் உலகின் 10 முன்னணி அணிகள் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ளன. இதில் தனது முதல் லீக் போட்டியில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட் டொபாக்கோ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற டிரினிடாட் கேப்டன் டேரன் கங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் அட்ரியன் பரத் ஆகியோர் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 21 க்கு உயர்ந்தபோது 11 ரன்கள் எடுத்திருந்த பரத், வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பந்தில் போல்டானார். இதையடுத்து ப்ராவோ களமிறங்கினார். இவரும் அதிரடியை காட்டினார். அணியின் எண்ணிக்கை 41 க்கு உயர்ந்தநிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் கங்கா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ப்ரான்க்ளின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஸ்கோரிலேயே விக்கெட் கீப்பர் ராம்தின் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவராலேயே பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் 57 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது டிரினிடாட் அணி. இதனை அடுத்து டிரினிடாட் அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹர்பஜன் மற்றும் மலிங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசினர். இதனால் டிரினிடாட் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. டிரினிடாட் தரப்பில் அஹமது எடுத்த 23 ரன்களே அதிகபட்சமாகும். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், அஹமது, பொல்லார்ட்டு, பிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் டிரினிடாட் அணியின் ராம்பாலின் அதிரடியான பந்துவீச்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுமன்-10, பிராங்க்ளின் -0 , சைமண்ட்ஸ் -0 என்று ஆகியோர் அவுட்டானார்கள். துவக்க வீரர் பிளிஜார்டின் விக்கெட்டை பத்ரி எடுக்க, 16 ரன்களை எடுப்பதற்குள் மும்பை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ராயுடுவுடன் ஜோடிசேர்ந்த அதிரடி வீரர் பொல்லார்டும் 9 ரன்களை மட்டும் எடுத்து நரைன் பந்தில் போல்டானார். இதனால் மும்பை அணியின் வெற்றி கேள்விக்குறியானது. மிக எளிய இலக்கை கடின இலக்காக்கி மும்பை அணி தத்தளித்தது. டிரினிடாட் டொபாக்கோ அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கைகொடுக்க மும்பை அணி வெற்றி இலக்கை மிக மெதுவாக நெருங்கியது. அணியின் எண்ணிக்கை 96 ஐ எட்டியபோது 8 வது விக்கெட்டாக மலிங்கா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 47 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த ராயுடு மும்பை அணி 97 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் களமிறங்கிய சாஹால் அந்த பந்தை தட்டிவிட்டு மிக வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்தார். அதற்குள் பந்து பீல்டரை எட்டிவிட சாஹால் மிக வேகமாக இரண்டாவது ரன்னிற்கு ஓடினார். அதற்குள் பந்து கீப்பர் ராம்தின் கைக்கு கிடைத்தது. ஆனால் கீப்பர் பந்தை ஸ்டெம்பை குறிவைத்து அடிக்காததால் சாஹால் அந்த ரன்னையும் பூர்த்தி செய்தார். இதனால் கடைசி பந்தில் மும்பை இண்டியன் த்ரில் வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக ரவி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன்சிங் இந்த போட்டியில் வெற்றிபெற அனைத்து தகுதிகளும் நிறைந்த அணி டிரினிடாட் டொபாக்கோதான் என்றார். தங்களது அணி வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடியதாக தெரிவித்த அவர், பேட்டிங் இவ்வளவு மோசமாக இருந்தால் அரையிறுதியை எட்டுவது கடினம் என்றும் தெரிவித்தர்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த டிரினிடாட் டொபாக்கோ அணி கேப்டன் டேரன் கங்கா, தங்களது அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் எதிரணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது என்றும் கடைசியில் கீப்பர் ராம்தின் முடிவை மாற்றிவிட்டார் என்றும் ஆனால் ஆட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்றும் தெரிவித்தார்.
மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.