எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் புதிய உள்விளையாட்டரங்கம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தெரிவித்ததாவது,
பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் பேசுகையில்,
அம்மா அவர்களின் அரசு விளையாட்டுத்துறைக்கு தனிக்கவனம் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் பெறுகின்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் அம்மாவின் அரசு விதி 110ன் கீழ் கோயம்புத்தூருக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய முதற்கட்டப்பணியாக நகரின் மையப்பகுதியில் சுமார் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டதை இன்று பார்வையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைந்து பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நீச்சல் குளம், வாலிபால், டென்னிச், அத்லெட்டிக்ஸ் மற்றும் பல்வேறு உள்ளரங்கு விளையாட்டுக்கள் விளையாட்டுகளுக்கேற்ப உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதுடன் விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளது. இதன் நோக்கம் மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை கற்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்பதேயாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை எப்பொழுதுமே விளையாட்டிற்கு அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள் அதனை மேலும், விரிவுபடுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் நேரு விளையாட்டு அரங்கில் விடுதியில் தங்கி பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிடம் ஆலோசனை வழங்கும் பொழுது, அம்மா அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் பெற ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும்படி, நல்ல உடல் ஆரோக்கியம் போதிய அளவு பயிற்சி, விடா முயற்சி இம்மூன்றையும் நிலைப்படுத்தி முயற்சி மேற்கொண்டால் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கில் சாதனை படைக்கலாம் முதலில் பயிற்சி பெறுமுன் சாதனையாளர்கள் எவ்வாறு வெற்றிபெற்று வருகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அவர்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு அவர்களைப் போல் நாமும் கையாண்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும் அதற்கு பயிற்சியாளர்களும், மாணவர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களின் மனநிலையறிந்து செயலாற்றிட வேண்டுமென அறிவுரை வழங்கினார். அதேபோல் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்றாலே ஒவ்வொருவரும் ஒரு நிலையை எட்டிவிடலாம் அதை ஊக்கப்படுத்திடும் வகையில் முதல் பரிசு 5லட்சம், இரண்டாம்பரிசு 3லட்சம், மூன்றாம் பரிசு 1லட்சம் என வழங்கப்படுகிறது. இப்போட்டியானது நவம்பர் 2017ல் நடைபெறவுள்ளது. இப்பொழுதே மாணவர்கள் தொடர் முயற்சி எடுத்தால் வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம். அதேபோல் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் அதிகளவு கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் விளையாட்டு மைதானங்களில் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகிறது அதனை நல்ல முறையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனையாளர்களாகி உலக அளிவில் தமிழகத்திற்கும் அம்மாவிற்கும் பெருமை தேடித்தரவேண்டும் என பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவிக்கையில்,
அம்மா அவர்களின் அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே தனிக்கவனம் எடுத்துக்கொண்டு கேட்கும் திட்டங்கள் அனைத்தையுமே உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள் அதனடிப்படையில் சட்டப்பேரவையில் விதி110ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு புதிய உள்கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்கியதுடன் நிதியையும் உடனே வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று அமைச்சர் அவர்களுடன் பார்வையிட்டு பணியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் கோய்புத்தூர் பகுதிக்கு கோவைப்புதூர், மற்றம் நகரின் மற்றொரு பகுதியிலும் புதிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்ததையும் பரிசீயலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்குரிய பணிகளும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது அமைக்கப்படவுள்ள உள் விளையாட்டரங்கிர்கு ஒதுக்கீடு நிதி போதாது என்றால் அதற்கும் கூடுதல் நிதிவழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இது மட்டுமின்றி அம்மாவின் அரசானது மாநகராட்சியின் அதீத வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேற்கு புறவழிச்சாலை ரூ.300 கோடி மதிப்பில் அமைக்க உத்தரவிட்டு அதிவேகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் உக்கடம் பகுதியில் பாலம் அமைக்க ரூ.85 கோடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.90 கோடி நிதியொதுக்கீடு வழங்கி அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டு தற்போது இருதயம் அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கி மருத்துவமனை சாதனைபடைத்துள்ளது. இதன் மூலம கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளையும் மிஞ்சி விட்டது என்ற அளவிற்கு அனைத்து திட்டங்களையும் அம்மாவின் அரசு வழங்கி வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் ஆகியோர், அரசு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டு அதன் தன்மைகுறித்து கேட்டறிந்ததுடன், கொங்கு நாட்டு வரலாற்றை அனைத்துப்பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டு அதற்குரிய இடமும் தேர்வு செய்யப்பட்டு அங்கு பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளன. அதேபோல் இங்கு ஒரே இடத்தில் எல்லோரும் ஒரு இடத்தில் அனைவரும் காணும் விதமாக அகல்வாய்வு அருங்காட்சியகமும் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் என தனித்தனியாக பார்வையிட்டு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அமைத்துக் கொடுப்பதுடன், மேலும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வீ.சிஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, விளையாட்டுத்துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், கீதாஞ்சலி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி பி.மேத்யூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல