எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது கட்டமாக 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்த 67 தொகுதிகளில் 34-ல் சமாஜ்வாடி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. பாரதிய ஜனதாவும் பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
720 பேர் போட்டி:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 720 பேர் போட்டியிடுகிறார்கள். பர்காபூர் தொகுதியில் அதிகப்பட்சமாக 22 பேரும் தனாவ்ரா தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேரும் போட்டியிடுகின்றனர். 67 தொகுதிகளும் 11 மாவட்டங்களில் இருக்கின்றன. சஹரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பால், ராம்பூர், பேரேலி, அம்ரோஹா, பிலிபத், ஹெரி,ஷாஜகன்பூர், பதோவா ஆகிய மாவட்டங்களில் உள்ளன. 2 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 40 ஆயிரம் பெண் வாக்காளர்கள்.
வாக்குச்சாவடிகள்:
மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 771 வாக்குச்சாவடி மையங்கள், 23 ஆயிரத்து 693 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 67 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் அஜம்கான் அவரது மகன் அப்துலலா அஜாம் ஆகியோர் உள்பட பல முக்கியமானவர்கள் உள்ளனர்.
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 சட்டமன்ற தொகுதிகளில் 628 பேர் போட்டியிடுகிறார்கள். 74 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இதில் கர்ணபிரயாக் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் குல்தீப் சிங் கன்வாசி மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ்,பாரதிய ஜனதா இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் அதிருப்பதி வேட்பாளர்கள் 12 பேர் சுயேட்சையாக போட்டியடுவதால் தேர்தல் முடிவு குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிரபிரசாரம் செய்தார். ரிஷிகேஷி உள்பட பல இடங்களில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். ஹரித்வாரில் சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தார். மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஹரித்வார் தொகுதியில்தான் அதிகப்பட்சமாக 12 தொகுதிகள் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வர் ஹரீஸ் ரவாத், மாநிலம் முழுவதும் சென்று தீவிரபிரசாரம் செய்தார். அவருக்கு இது முக்கியமான தேர்தலாகும்.
பாதுகாப்பு:
உத்தரகாண்ட் மாநில தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ஆயுத படையினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் முதல் தடவையாக வாக்காளர் அடையாள மிஷன்கள் வைக்கப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன என்றார். பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதியும் பிரசாரம் செய்தார். ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்