எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், அக். - 10 - ஏழை, எளிய பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா அம்மாவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர். தமிழக முதல்வராக 3 வது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு பல்வேறு நன்மைகளை தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்தோடு செய்து வருகிறார். பதவியேற்ற முதல் நாளன்றே ஏழு நல்ல காரியங்களை நிறைவேற்ற அவர் கையெழுத்திட்டது தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒன்று. ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், முதியோர்களுக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முதல் நாளன்றே கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மேலும் ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பையும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் அதை செயல்படுத்தியும் வருகிறார். நீலகிரி கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதிலாக மின்சார அடுப்பு வழங்கவும் அவர் கருணையோடு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஏழை பயனாளிகளுக்கு கறவை மாடுகள், 4 ஆடுகள் ஆகியவற்றையும் ஜெயலலிதாவின் அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து ஏழை பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இதனால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து சோர்ந்து போயிருந்த ஏழை தாய்மார்கள் இப்போது நம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஆடு, மாடுகள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியும் பெருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, தாய்மார்கள் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். இலவச ஆடுகள் பெற்ற சில தாய்மார்கள் முதல்வரை மனமுவந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த சிற்றம்பாக்கம் கிராமத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் முதல்வர் ஜெயலலிதாவை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாராட்டியுள்ளனர்.
எல். பிரேமா:
இந்த கிராமத்தில் வசிக்கும் எல். பிரேமா கூறுகையில், எனது கணவர் பெயர் லோகநாதன் எனது கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு பிள்ளைகள் கிடையாது. நான் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் இந்த ஆடுகளை 1 மாதத்திற்கு முன் அதிகாரிகளுடன் சென்று செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி சந்தையில் வாங்கினேன். 1 கடா ஆட்டையும், 3 பெண் ஆடுகளையும் அதிகாரிகளுடன் சென்று வாங்கினேன். இந்த 4 ஆடுகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம், ஆடுகளை பாதுகாக்க வீட்டின் அருகே கொட்டகை போடுவதற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தார்கள் அதிகாரிகள் என்றும் அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதா என்றும் எங்களுக்கு துணையாக இருப்பார்கள், அவரது கையால் ஆடுகளை வாங்கியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களால் கடைசி வரை ஜெயலலிதாவை மறக்க முடியாது என்றும் நா தழுதழுக்க கூறினார் பிரேமா.
பயனாளி யசோதா (50):
இவர் சிற்றம்பாக்கம் கிராமத்தில் வசிக்கிறார் இவர் வாய் பேசமுடியாத ஊமை. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். இவருக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கிறார். இவர் கூலி வேலை செய்கிறார். இவருக்கு தமிழக முதல்வர் 4 ஆடுகள் கொடுத்துள்ளார் என்பதை சைகை மூலம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார்.
பயனாளி முனியம்மாள் (62):
இவரது கணவர் பெயர் துரை . 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். முனியம்மாளுக்கு 4 ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உள்ளது. இவர் தனக்கு ஆடுகள் வழங்கப்பட்டது பற்றி கூறுகையில், பிழைப்புக்காக, வழி இல்லாத எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகள் வழங்கி உள்ளார். இந்த காலத்தில் பிள்ளைகளே பெற்றோர்களை கவனிப்பது கிடையாது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தாய் உள்ளத்தோடு ஏழை, எளிய மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்து வருகிறார் என்று கூறிய அவர், முதல்வர் ஜெயலலிதாவை நான் படுக்கும் போது கூட கடவுள் போல் நினைத்துக் கொண்டு படுக்கிறேன் என்று உணர்ச்சி மல்க கூறினார்.
பயனாளி பச்சையம்மாள் (36) :
நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் சம்பத். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளார். அவர் பெயர் ரமேஷ். முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகளை எனக்கு கொடுத்துள்ளார். 1 மாதத்திற்கு முன் ஆடுகளை செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி ஆட்டு சந்தையில் வாங்கினேன். இந்த ஆடுகள் 6 முதல் 9 மாதத்திற்குள் வளர்ந்து விடும் 2 ஆண்டுகள் வரை அவற்றை காப்பாற்றி விட்டால் ஆடுகள் பெருகிவிடும். பிறகு எங்களுக்கு கவலை இல்லை என்றும், ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஆடுகளை கால்நடை மருத்துவர் சோதனை செய்து வருகிறார் என்றும் கூறியதோடு எங்களை வாழ வைத்து பார்க்கும் அன்பு தெய்வம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
பயனாளி துரையம்மாள் (57):
என் கணவர் பெயர் தசரதன். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் காலமானார். எனக்கு 2 ஆண் பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் அனைவருக்கும் திருமணம் செய்து விட்டேன். நான் கூலி வேலை செய்து வருகிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த கிராமப்புற ஏழை, எளியோருக்கு ஆடு வழங்கும் திட்டம் மகத்தான திட்டம். அ.தி.மு.க ஆட்சி வந்த சில மாதங்களில் எங்களுக்கு 4 ஆடுகள் வழங்கியது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் எங்கள் வாழ்க்கை இனி மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் நன்றி பெருக்குடன் கூறினார்.
பயனாளி சுலோச்சனா (50):
என் கணவர் பெயர் ரத்தினம். அவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு 1 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் மகன் சுரேஷீக்கு வலது கால் உடைந்துள்ளது. மகள் அம்மு 8 ஆம் வகுப்பு படிக்கிறாள். நான் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்நிலையில் தமிழக முதல்வர் ஏழை எளியவர்களுக்கு கிராமப்புறங்களில் வாழும் பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வழங்கியது சந்தோஷமாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா பேர் சொல்லும் படி நலத்திட்டங்களை செய்து வருகிறார். சாகும் வரை நான் அவரை மறக்க மாட்டேன். நன்றியுடன் அவருக்கு இருப்பேன், இதுநாள் வரை நான் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில் இருந்தேன், கவலையாக இருந்தது. இப்போது முதல்வர் ஜெயலலிதா இலவசமாக 4 ஆடுகள் கொடுத்தது பெருமையாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது என்று கூறினார்.
பயனாளி முடியலா(48):
என் கணவர் பெயர் மூர்த்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காலமானார். 1பெண் உள்ளார். அவள் பெயர் சரிதா. அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வயிற்றுபிழைப்பு நடத்தி வருகிறேன், எனது பிழைப்புக்காக 4ஆடுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதை வைத்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவேன், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முதல்வரை மறக்கவே மாட்டேன். அம்மாவை நேரில் காணமுடியாத நிலையில் இருந்தேன். ஆனால் அம்மாவை திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில் நேரடியாக சந்தித்து அவரிடம் இருந்து 4 ஆடுகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நன்றி உணர்ச்சியோடு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமையன்று கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆடுகளை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஏதாவது குறைகள் இருந்தால், ஆடுகளுக்கு நோய் ஏற்பட்டால் உடனடியாக சொல்லுங்கள் மாத்திரை, மருந்துகள் தருகிறேன் என கேட்டு விட்டு செல்கிறார்கள் மருத்துவர்கள். திக்கில்லாத எங்களுக்கு அம்மாதான் எங்களுக்கு குல தெய்வம் என்றும் நாங்கள் இப்போது நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
ஆக, இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் வாழ்க்கையில் இப்போது நம்பிக்கையோடு வீரநடை போட்டு வருகிறார்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.