எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் அக்.14 - சேலம் மாநகராட்சிக்கு அத்தியாவசிய தேவையான தனி கூட்டு குடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து குடிதண்ணீர் கட்டணத்தையும், டெபாசிட் தொகையையும் உயர்த்தி இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் கடந்த 5 ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றியுள்ளது தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம்.
சேலம் மாநகரம் கடந்த 1995 வரை சேலம் நகராட்சியாக இருந்தது. 1995 ல் தி.மு.க.ஆட்சியின் போது சேலம் நகராட்சியையும், அருகில் உள்ள சூரமங்கலம் நகராட்சியையும் இணைத்து 60 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டபோது சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையே இருந்தது.
கடந்த 96 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த மாநகராட்சியை தி.மு.க.கைப்பற்றியது. அதன் மேயராக டாக்டர் சூடாமணி பதவி வகித்தார்.96- 2001 ல் காலத்தில் தி.மு.க.நிர்வாகத்தில் நடந்த ஆழ்துளை கிணறு ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் பிரச்சனை, ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனை சிக்கல்களால் 2001 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த மாநகராட்சி அ.தி.மு.க.வசமானது.அப்போது சுரேஷ்குமார் மேயராக பதவி வகித்தார். அ.தி.மு.க.காலத்தில்தான் சேலம் மாநகராட்சிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. சாலைவசதிகள், சேலம் மாநகராட்சியாக இணைக்கப்பட்ட பின் நகர மலை அடிவாரம், குரங்குசாவடி, கொண்டலாம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பெற குடிதண்ணீர் மேல்நிலைத் தொட்டிகள் என பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க.வின் 5 வருட காலத்தில் சுமார் 63 கோடி ரூபாய் மாநகரின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. அந்த பணத்தில்தான் தி.மு.க.நிர்வாகம் சுமார் 2007 வரை பல திட்டங்களை செயல்படுத்தியது.
2006 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகத்தை கட்டவிழ்த்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர்.அதில் சேலம் மாநகராட்சியும் தி.மு.க.வசமானது. அதன் மேயராக ஜெ.ரேகா பிரியதர்ஷினி தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.வினர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 2006 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நாங்கள் மேயரானால் தினமும் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 100 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க தனி குடிதண்ணீர் திட்டம், மாநகராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாகவும், பாதாள சாக்கடை திட்டம், மாநகரில் நாள்தோறும் அதிகரிக்கும் குப்பை சேகரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பல திட்டங்களை கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தார். 2007 ல் தி.மு.க.மேயர் ரேகா பிரியதர்ஷினி பொறுப்பேற்று போடப்பட்ட பட்ஜெட் புத்தகத்திலும் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். அதே ஆண்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 14.9.07 ல் சேலம் வந்த போது சேலம் மாநகர தனிகுடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்ற மாநகரின்முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் இது வரை அந்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
2007 ல் பட்ஜெட்டில் தனி குடிதண்ணீர் அறிவிப்பு வந்தவுடன் அடுத்த சில மாதங்களிலேயே திட்டத்தை நிறைவேற்ற நிதி வேண்டும் என கோரி மாத குடிதண்ணீர் கட்டணம் ரூ.100 இருந்ததை ரூ.150 ஆகவும், வைப்பு தொகையை ரூ.5 ஆயிரத்தை த்தை 7.500 ஆகவும் உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சிகள் திட்டத்தை நிறைவேற்றிய பின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று சொன்னபோதிலும் தங்களுக்கு உள்ள மெஜாரிட்டையை வைத்து தீர்மானம் நிறைவேற்றி கடந்த 4 வருடங்களாக மக்களிடம் கூடுதல் குடிதண்ணீர் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். ஆனால் மாநகர எல்லைக்குள் 8 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது.
91.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 8.20 லட்சம் ஆகும். தொழில் நிமித்தமாக தினமும் வந்து போதும் மக்கள்,வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வந்துள்ள மாணவர்கள் என மாநகர மக்கள் தொகை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தாலும் தண்ணீர் சப்ளை முறையாக இல்லாததாலும் தண்ணீர் பிரச்சனையை குறித்து மாநகராட்சி பகுதிகளில் பல முறை பொதுமக்கள் சாலை முற்றுகை, மாநகராட்சி முற்றுகை என பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது. தண்ணீர் பிரச்சனை குறித்தும் பல முறை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தும் இதுவரை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதே மாநகராட்சி துப்புரவு பணியும் மந்தமாகவே உள்ளது.60 கோட்டங்கள் கொண்ட மாநகராட்சியில் 21 கோட்டங்கள் அரசின் விதிகள் படி தனியாருக்கு விடப்பட்டுள்ளது.மீதம் உள்ள 39 கோட்ட துப்புரவு பணிகளை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தினமும் குப்பைகள் அள்ளும் பணியில் தேக்கம் இருப்பதால் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தனியார் துப்புரவு நிறுவனமோ குறந்த சம்பளத்தில் ஆட்களை நியமித்து அதிக லாப நோக்கில் செயல்படுவதால் குப்பைகள் சரியாக அள்ளுவதில்லை. குப்பை அள்ளும் பணிகளை மேற்பார்வையிடும் சுகாதார ஆய்வாளர்களும் சரிவர இப்பணிகளை கண்காணிக்காமல் இருப்பதை மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை கூளங்கள் காட்சி தருகின்றன. இது குறித்து பலமுறை கவுன்சிலர்கள் முறையிட்டாலும் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் மேயர் மற்றும் அதிகாரிகள் உறுதி கொடுப்பார்கள் உடனே சில நாட்கள் பணி சரியாக நடக்கும் மீண்டும் தேக்க நிலை. இப்படியாக குப்பைகளை அகற்றுவதிலும் சீராண பணிகள் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளாக பட்ஜெட்டில் பக்கங்களை மாற்றி, மாற்றி சேலம் தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம் எந்த பணியையும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. 2011-12 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மாநகராட்சியின் நிர்வாகத்தின் 5 வது கடைசி நிதி நிலை அறிக்கை ஆகும். சேலம் மாநகர மக்களுக்கு டி தி.மு.க.வைச் சேர்ந்த மேயரால் மாநகராட்சி நிர்வாகம் 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை.நகரத்தில் முழுவதும் வீட்டுவரி, வணிகவரி,தொழில் வரிகளை பல மடங்கு உயர்த்தி சேலம் மாநகர மக்களின் சுமையை திணித்து உள்ளதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். அதே போல் 2009 ஆம் ஆண்டில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சத்திரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த5 ஆண்டுகளில் இதில் எந்த பணியும் முற்றுப் பெறவில்லை. வருகின்ற சட்டமன்றதேர்தலை முன் வைத்து தனிக்குடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நடைபெறுவது அவசர,அவசரமாக பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் செய்ய மாநகராட்சியில் நிதியே இல்லாத நிலைமையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்க போதிய திட்டங்கள் தீட்டவில்லை. வருமானம் வரும் நிதி ஆதாரங்களை கூட கட்சியினருக்கும், அமைச்சருக்கு வேணடியவர்களுக்கும் குறைந்த விலையில் டெண்டர் கொடுத்துள்ளதால் போதிய வருவாயும் மாநகராட்சிக்கு இல்லை. உதாரணமாக சேலம் அண்ணா nullங்காவை தனியார் நிறுவனம் ஒன்று 10 வருட குத்தகைக்கு எடுத்து இருந்தது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த nullங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு குழந்தைகளை மகிழ்விக்க, பொதுமக்கள் பொழுது போக்க, ராட்டிணம், ரயில், மற்றும் உணவு விடுதிகள், ஸ்நாக்ஸ் சென்டர்களும் உள்ளன. நாள்தோறும் 20 ஆயிரம் வரை வருமானமும் ஆண்டிற்கு சுமார் 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரக்கூடிய அந்த nullங்காவை அதே நிறுவத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு ஏலம் விட்டு மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் கொலுத்த லாபம் பார்த்துள்ளனர். இதில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூறியும் பயன் இல்லை. இன்னு தொடர்ந்து பழைய குத்தகைதாரர் வசமே nullங்கா உள்ளது. சேலம் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆனந்தா பாலம் பணிகள் 3 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது இதனால் மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம்.
கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சியின் அடிப்படை தேவைகளான சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முழுமை பெறவில்லை. தி.மு.க.கவுன்சிலர்கள் பகுதிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி வேண்டிய தெருக்களுக்கு மட்டும் அடிப்படை பணிகளை செய்து கொண்டனர்.
2009-2010 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான குறுகிய பாலத்தை அகலப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். 5 ரோடு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், சாரதா காலேஜ் முன்புறம், குகை பெரியார் வளைவு, ஆகிய பகுதிகளில் உயர்மட்ட நடைபாதை பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அமைச்சரை வைத்து அடிக்கல் நாட்டினர். ஆனால் அந்த பணிகள் இன்றுவரை துவங்கப்படவில்லை.
மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி nullங்கா அமைத்தல், ஏரி ஆழப்படுத்தி படகு போக்குவரத்து அமைத்தல் தங்குமிடங்கள் அமைத்தல் அறிவிப்பு இதுவரை செயல்படுத்தவில்லை.
முள்வாடி கேட் பகுதியில் இரயில்வேத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்போடு மேம்பாலம் அமைக்கப்படும் என்று 2008-09 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தனர். ஆனால் அந்த பணியும் நடக்கவில்லை. அம்மாபேட்டை ஏரியில் கழிவு தண்ணீர் கலக்காமல் நடவடிக்கை எடுத்து nullங்கா அமைப்பதாக சொன்னதையும் செய்யவில்லை.
வெள்ளகுட்டை ஓடை கால்வாய் பணிகள் 5 வருட காலங்கள் ஆகியும் பணிகள் முடியாமல் கால்வாயில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஏற்காடு மலையில் இருந்து வரும் மழை தண்ணீர் செல்லும் சேலம் மாநகரின் நடுவில் செல்லும் ஆறாக திருமணி முத்தாறு இருந்தது. இந்த ஆறு நாமக்கல் மாவட்டம் வரை சென்று காவிரியில் கலக்கிறது. ஆனால் தற்போது இந்த ஆற்றில் சேலம் மாநகரில் கலக்கும் சாக்கடை கழிவுகளும், சாயப்பட்டரை கழிவுகளுமே,ஓடுகிறது. இதனால் மாநகரின் மையப்பகுதியில் ஒரே துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஆற்றை மாநகர எல்லைவரை சீரமைத்து சரி செய்ய ரூ.31.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முழுமை பெறாமல் இன்னும் மந்தமாகவே நடைப்பெற்று வருகிறது. தேர்தலை மனதில் வைத்து எல்லா பணிகளையும் துவங்கி விட்டாலும் கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த பணியையும் நிறைவேற்றவில்லை என்பது மக்கள் மனதில் பெரும் குறையாகவு உள்ளது. இப்படி மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம் சொன்ன எந்த திட்டங்களையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தி.மு.க.மேயர் வேட்பாளர் எஸ்.டி.கலையமுதனோ நான் மேயரானால் பாதாளசாக்கடை திட்டம், திருமணி முத்தாறு திட்டம், கூட்டு குடிதண்ணீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதாக கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.
மாநகராட்சியில் வார்டுகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களை எடுக்கும் காண்டிராக்டர்களுக்கே சரி,வர நிதி ஒதுக்கி செக் வழங்காமல் கால தாமதம் படுத்துவதால் டெண்டர்கள் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவித்த தி.மு.க.மாநகராட்சி அதில் போதிய அக்கறை செலுத்தாமல் வாக்களித்த மக்களை ஏமாற்றி நிர்வாகத்தில் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் மட்டும் தங்களது வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.