எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 17 - அ.தி.மு.க. உருவாகி 39 ஆண்டுகள் நிறைவடைந்து 40 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் எந்த காலத்திலும் தீய சக்திகள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடியாத வகையில் மக்கள் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 39 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2011ல் அகவை 40ல் அடியெடுத்து வைப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னாளில் நமது இயக்கம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த வரலாற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல் வீரர்களையும், வீராங்கனைகளையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீnullத்த உத்தமத் தொண்டர்களின் தியாகங்களையும் எண்ணி அவர்களுக்காக கண்ணீர் சிந்தி நன்றி கூறும் நெகிழ்ச்சியான உணர்வையும் பெறுகிறேன். தமிழகத்து மக்களெல்லாம் ஒரு சேர கிளர்ந்தெழுந்து கருணாநிதி என்னும் தீய சக்தியை தூக்கி எறிய கண்டுபிடித்த பேராயுதம் தான் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்காக, மக்களே உருவாக்கி, மக்கள் திலகத்தை தலைமை ஏற்கச் செய்து, ஆட்சி அமைக்க உருவாக்கிய மக்கள் புரட்சி இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எனவே தான், 1972ல் கழகம் தொடங்கப்பட்ட ஆறே மாதத்தில் 1973ஆம் ஆண்டில் திண்டுக்கல் மண்ணில் நாடாளுமன்ற இடைத் தேர்தலை சந்தித்து இந்த இயக்கத்தால் வெற்றி பெற முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். ஓர் இயக்கம் தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் ஆதிக்க சக்தியை, குடும்ப ஆதிக்கத்தை, கொள்ளைக் கும்பலின் அராஜகத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்தது என்றால், அது இந்திய அரசியல் வரலாற்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் மட்டும் தான். எத்தனை முறை முயன்றும் கருணாநிதி என்னும் தீய சக்தியால் வெற்றி பெற முடியாத, வீழ்த்த முடியாத இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும் உலகிற்கு உணர்த்தியது. எம்.ஜி.ஆர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், சத்துணவுத் திட்டம் என்னும் உலகுக்கே கலங்கரை விளக்கமாய் அமைந்த மாபெரும் மனிதாபிமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாரதியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அன்னை தெரசா போன்ற சான்றோர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள் கண்டவர் எம்.ஜி.ஆர். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரு மொழிக்காக பல்கலைக்கழகம் கண்டவர் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். ஆம், தஞ்சையிலே அவர் ஏற்படுத்திய தமிழ் பல்கலைக்கழகத்தைத் தான் குறிப்பிடுகிறேன். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஆழமான அன்பும், அசைக்க முடியாத பற்றுறுதியும், எல்லையில்லாத நன்றிப் பெருக்கும் உடையவர் நம் எம்.ஜி.ஆர். எனவே தான், இன்றைய தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கெல்லாம் முன்னோடியாக பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார். சமூக nullநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். எனவே தான், 31 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று பிற்பட்டோருக்கு இருந்த உரிமையை 50 விழுக்காடாக தனது ஆட்சிக் காலத்தில் உயர்த்திக் காட்டினார். 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற,நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்று வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நம்முடைய இயக்கத்தை அபகரிக்கவும், ஆட்சியை கைப்பற்றவும் தீய சக்தி மேற்கொண்ட முயற்சிகளை என்னுடைய தீவிர செயல்களால் முறியடித்தேன். தேர்தல் பிரச்சாரம் வழியாக நான் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப் பயணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவே வெளி நாட்டில் இருந்து திரும்பி வந்து பதவியேற்றார். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் கழகம் பிளவுபட்ட நேரத்தில், நான் எடுத்த தீவிர முயற்சிகளின் காரணமாக, முடக்கப்பட்டிருந்த கழகத்தின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தேன். 1989ல் கழகம் ஒன்றிணைக்கப்பட்டது. மீண்டும் 1991ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி எனது தலைமையில் அமைந்தது. எண்ணற்ற நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினோம். பின்னர் 1996ல் வந்த தேர்தலில், தீய சக்தியும், தந்திர சூழ்ச்சியாளர்களும், சூதுமதியினரும் மேற்கொண்ட அரசியல் சதுரங்க விளையாட்டு காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழகமோ அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்தது. தமிழக மக்கள் விழித்தெழுந்து 2001ஆம் ஆண்டு கழகத்தின் கைகளில் மீண்டும் ஆட்சியை ஒப்படைத்தனர். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அரும்பாடுபட்டு நிர்வாகத்தை சீரமைத்தேன். நிதி நிலையை உயர்த்தினேன். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடம் நோக்கி பீடுநடை போட்டது. சற்றும் எதிர்பாராத விதமாக 2006ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத கட்சியாக இருந்த போதும் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. வழக்கம் போல், கருணாநிதியின் குடும்பம் தமிழ் நாட்டை சூறையாட ஆரம்பித்தது. எல்லா பதவிகளும், எல்லா செல்வங்களும் ஒரு குடும்பத்திற்கே என்ற நிலையை மீண்டும் கருணாநிதி உருவாக்கினார். உலக வரலாற்றில் யாரும் கண்டிராத 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்த கட்சி திமுக; ஊழல் புரிந்த குடும்பம் கருணாநிதி குடும்பம் என்ற ஒரு அவப் பெயரை தேடிக் கொடுத்தார் கருணாநிதி. ஆளும் கட்சியினரின் அராஜகம், அட்டூழியம், ஊழல், கொள்ளை இவற்றை எதிர்த்து நான் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவும்; அந்த முயற்சிக்கு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளும், தமிழக மக்களும் அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவும், இதோ, நம்முடைய கழகம் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்ந்திருக்கிறது! உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே விலையில்லா அரிசி; முதியோருக்கு 1,000/ ரூபாய் ஓய்வூதியம்; தாலிக்குத் தங்கம்; திருமண உதவித் தொகை 25,000/ ரூபாய் மற்றும் 50,000/ ரூபாய்; தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி; ஏழைகளுக்கு ஆடு, மாடுகள் ஆகியவற்றை வழங்குகிறோம். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தி.மு.க.வினராலும், சமூக விரோத சக்திகளாலும் அபகரிக்கப்பட்ட ஏழை, எளியோரின் நிலங்கள் சட்டப்படி மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் மகத்தான பணி நாடே வியக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சி தொடர, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய இந்தப் பொன்னாளில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
இனி, எந்தக் காலத்திலும் தீய சக்திகள் தமிழ் நாட்டை கொள்ளையடிக்க முடியாத வகையில் மக்கள் பணியாற்றுவோம் என்பது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி. இந்தப் பொன்னாளில் ஊரெங்கும் கழகக் கொடிகளை ஏற்றுங்கள்! எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழுங்கள்! உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வெற்றி மாலையை நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்!
வாழ்க பெரியார் புகழ்!, அண்ணா நாமம் வாழ்க!, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்