எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.20 - தமிழகத்தில் நேற்று நடைப்பெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்தது என்றும் எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:
கடந்த 17-ந் தேதி நடைப்பெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 77 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (புதன்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. கிராமப்புறங்களில் காலை 7 மணியில் இருந்தே ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. 38 ஆயிரத்து 20 ஓட்டுச் சாவடிகளில் நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்காக பாதுகாப்பு உள்பட எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்தனர்.
கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்கள் போட்டதால் மற்ற வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டது. nullத்சிலிப்புகள் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதால் தேவை இல்லாத தாமதம் தவிர்க்கப்பட்டது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒரு கோடியே 92 லட்சத்து 67 ஆயிரத்து 501 பேராகும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் புறநகர் பகுதிகளில் 2வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், பம்மல் நகரசபை பகுதிகளில் விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அது போல திருnullநீர்மலை, பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளிலும் காலை முதலே விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. தென்சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், கவுல் பஜார், பொழிச்சலூர், திரிசூலம், மூவரசம்பேட்டை, மதுர பாக்கம், மேடவாக்கம், வேங்கை வாசல், திருவன்சேரி, அகரம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம் பாக்கம், சிதலபாக்கம், ஒட்டியம்பாக்கம் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் விறு விறுப்பாக நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி திருத்தணி ஆவடி, திருவேற்காடு ஆகிய 4 நகராட்சிகளிலும், நாரவாரிகுப்பம் திருமழீசை திருநின்றவூர் ஆகிய 3 பேரூராட்சிகளிலும், பூந்தமல்லி, கடம்பத்தூர், திருத்தணி, புழல், ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 160 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைப்பெற்றது.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் தவிர நகர சபையில் இருந்து கிராமம் வரை ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. ஓட்டுப் பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுஎண்ணும் இடங்களுக்குகொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். முதல்கட்ட தேர்தல் நடந்த போது முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார்கள் கூறப்பட்ட 7 இடங்களில் இன்று (அக். 20)மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், நாளை மறு தேர்தல் நடத்தப்படும்.
மறு தேர்தல் நடத்தப்படும் இடங்களில் பதிவான ஓட்டுக்களும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்புடன் வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த 1072 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்புடன் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். சென்னையில் 200 வார்டுகளின் ஓட்டுக்கள் 18 இடங்களில் எண்ணப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் தினத்தன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறும்போது தமிழகம் முழுவதும் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விறுவிறுப்பாகவும் நடைப்பெற்றது. பொது மக்கள் அஞ்சாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சிதேர்தலில் சுமார் 80 சதவீதம் பதிவாகி உள்ளது. பதிவான வாக்குகளின் (நேற்று) முழுமையான விவரம் இன்று இரவு தெரியவரும் இவ்வாறு சோ.அய்யர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.