எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலையினை அமைச்சர்கள் சம்பத் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவன வளாகத்தில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு உப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சஹாய் மீனா திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையுரையாற்றினார். விழாவில், அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் 1974 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 5504.12 ஏக்கர் நிலம் கொண்ட கால குத்தகை அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு வணிக உற்பத்தியினை தொடங்கிய இந்நிறுவனம் படிப்படியாக தனது உற்பத்தியினை விரிவாக்கம் செய்து வருகிறது. முதலில் தொழிலக தர உப்பு உற்பத்தியை தொடங்கி, பின்னர் பலவகை செறிவூட்டப்பட்ட உப்பினை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 1350 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் மற்றும் 300 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2016-17 ஆம் நிதியாண்டில் 2,18,450 டன் தொழிலக தரமுடைய உப்பினை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இருவித (இரும்பு மற்றும் அயோடின்) செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றினை 'அம்மா உப்பு" என்ற பெயரில் 11.06.2014 அன்று முதல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அம்மா உப்பு என்ற அதே பெயரில் அயோடின் கலந்த கல் உப்பினை வெளிச்சந்தையில் நவம்பர் 2014-இல் விற்பiனையினை துவங்கியது. பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு மேற்கூறிய உப்பு வகைகளை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக பிப்ரவரி 2015-இல் இருந்து விநியோகம் செய்து வருகின்றது. இத்திட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை 49,314 டன் அம்மா உப்பு வெளிச்சந்தை மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2012-2013ஆம் ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் பொழுது தமிழ்நாடு உப்பு நிறுவனம் அதன் உப்பு விற்பனை அளவினை அதிகரித்திட உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலையினை மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தில் நிறுவும் என்ற அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் டாட்டா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் வாலிநோக்கம் உப்பு கூட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 150 நபர்களுக்கு நேரடியாகவும், 50 நபர்களுக்கு மறைமுகமாகவும் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் இழப்பீட்டு உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால உதவித்தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் துவங்கப்பட்டு நிறைவேற்றப்படுவதன் மூலம் இச் ஜவுளி பூங்காவில் 30 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்பில் முதலீடு செய்து ஜவுளி தொழிற்சாலை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினைப் பெருக்கி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் விதமாக புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் வாலிநோக்கத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டிரஸ்ட் ஒருங்கிணைந்து ரூ.5.65 கோடி மதிப்பில் புதிதாக உப்பு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலக தர உப்பு , பலவகை செறிவூட்டப்பட்ட உப்பு என இரண்டு விதமாக ஆண்டொன்றிற்கு 40ஆயிரம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நாம் உட்கொள்ளும் உப்பு வகை அயோடின் குறைபாடு உள்ள உப்பு வகைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நுண்ணூட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்திட வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை பெருக்கிடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் டாடா டிரஸ்ட் செயல் தாளாளர் ஆர்.வெங்கடரமணன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டி, தமிழ்நாடு உப்புநிறுவன பொதுமேலாளர் கு.டில்லிகுமார், நிறுவன செயலாளர் தயானந்தன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, ராம்கோ கூட்டுறவுத் தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு கர்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், உள்பட அரசு அலுவலர்கள், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், டாடா டிரஸ்ட் நிறுவனத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.