எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அ தி.மு.க.வில் பிரிந்த இரண்டு அணிகளும் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி அணியில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் நாளை 24–ந்தேதி (திங்கட்கிழமை) அ தி.மு.க. தலைமை கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.இரண்டு அணியிலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் கட்சியை இணைத்து செல்லவும், ஜெயலலிதாவின் ஆட்சி எந்தவித இடையூறுமின்றி தொடரும் வகையிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் கே.பி. முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் எம்.பி., பாண்டியராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரு அணி குழுவினரும் வருகிற நாளை 24-ந்தேதி (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய அம்சங்கள் பற்றி இரு அணியினருமே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி. தினகரனும் ராஜினாமா செய்து கடிதம் கொடுக்க வேண்டும்.பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலங்களை வாபஸ் பெற வேண்டும். ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை ஓ.பன்னீர் செல்வம் வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குகிறது. நிபந்தனைகளை தளர்த்தினால் மட்டுமே தீர்வு எட்டும் சூழ்நிலை உருவாகும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும்.
ஒற்றுமையுடன் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். 4 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதன் பின்னரும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பம். எனவே அந்த வகையில் பேச்சுவார்த்தை அமையும் என்று தெரிகிறது.எனக்கு பின்னாலும் 100 ஆண்டு காலம் அ தி.மு.க. நீடித்து நிலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் கட்சியை சிறப்பான முறையிலும், ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தி கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தார். எனவே தான் 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி (அ தி.மு.க.) மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாற்றை ஜெயலலிதா ஏற்படுத்தினார்.பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளை கைப்பற்றி இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சி என்ற சாதனையை படைத்தார் ஜெயலலிதா. எனவே எத்தனையோ சோதனை, கஷ்டங்களை எல்லாம் தாங்கி கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று தொண்டர்களுக்கு பெருமையை தேடித் தந்தார் ஜெயலலிதாஎனவே அவர் வளர்த்த இயக்கத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஆட்சி தொடரவும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கவும் உறுதிப்பூண்டு செயல்படுவது தான் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு 24–ந்தேதி துவங்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வெற்றி பாதையில் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இருந்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்.அதற்கு முன்னதாக அந்த குழுவில் என்னென்ன பேசவேண்டும்? என்பது குறித்து ஆலோசிப்பார்கள். அதற்கு முன்னால் நிபந்தனைகளை பேசுவது சரியாக இருக்காது. விரைவில் நல்லது நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.