எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, அக்.- 31 - டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்று தொடரை பரிதாபமாக இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு கெவின் பீட்டர்சன் தலைமை வகித்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் ரகானே ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஃபின் பந்தில் அவுட்டானார். அடுத்த பிரேஸ்னன் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த உத்தப்பா விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டு அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியிலும் கோலி 15 ரன்களை மட்டுமே எடுத்து பிரேஸ்னன் பந்தில் அவுட்டானார். அடுத்து மனோஜ் திவாரி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். திவாரியும் 15 ரன்களை மட்டுமே எடுத்து பட்டேல் பந்தில் போல்டானார். நம்பிக்கையாக விளையாடிவந்த ரெய்னாவும் 39 ரன்களை எடுத்த நிலையில் ஃபின் பந்தில் பரிஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். திவாரி மற்றும் ரெய்னா ஆகியோர் இந்திய அணி மொத்த ரன்கள் 74 ஆக இருக்கும்போதே அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும், யூசுப் பதான் 10 ரன்களிலும், குமார் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. அஸ்வின் 17 ரன்களுடனும், வினய்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஃபின் 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்னன் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கால்ஸ் மற்றும் கீய்ஸ்வெட்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் அபாரமாக விளையாடினார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி எளிதானது. பட்டேல் 21 ரன்களையும், பொப்பாரா 14 ரன்களையும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பதான், கோலி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒரே ஒரு போட்டியைக் கொண்ட இந்த டுவெண்டி - 20 போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள். மேலும் சரியான பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை என்றும் தெரிவித்தார். 120 ரன்கள் என்பது மிக எளிதான ரன். இந்த மைதானத்தில் 170 அல்லது 160 எடுக்க முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு 140 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். மேலும் பீல்டிங்கில் செய்த சில தவறுகளும் இதற்கு காரணமாகிவிட்டது. பீட்டர்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்தார். எங்களுக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. 8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியும் எங்களால் போதுமான ரன்களை குவிக்க முடியாமல் போனது கவலைக்குரியது. இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் கடைசிவரை சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கும் அவர்களுக்கும் இதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் தோனி தெரிவித்தார். மந்தமான இந்த ஆடுகளத்தை பீட்டர்சன் நன்கு கணித்து ஆடியதால் அவர்கள் வெற்றியை தட்டிச்சென்றனர் என்றும் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு இளம் வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தோனி தெரிவித்தார். ஆனால் டெஸ்ட் போட்டித் தொடர் ஒரு நாள் போட்டிகள் போன்றதில்லை. ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர்கள் களமிறங்க வேண்டும் என்றும் தோனி ஆலோசனை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப