எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலை டோல்கேட் சார்பில் இயக்கப்பட்டு வந்த ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகன வசதிகள் அனைத்தும் திடீரென்று மாயமாகி விட்டது.விபத்து காலங்களில் மிகவும் உதவிகரமாக இருந்து வந்த இந்த வசதிகளை மீண்டும் செயல்படுத்திட மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக இயக்கப்பட்டு வரும் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.தென்மாவட்டங்களுக்கு நுழைவு வாயிலாக திகழ்ந்திடும் இந்த கப்பலூர் டோல்கேட் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கமான ஒன்றாகும்.இந்நிலையில் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் தொடங்கி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் இலக்கு வரையில் உள்ள சாலை கப்பலூர் டோல்கேட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வளையத்தில் வருகிறது.தினமும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் பயணிப்பதன் மூலம் கப்பலூர் டோல்கேட் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் தனது எல்கைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையை பராமரிப்பதில் டோல்கேட் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.குண்டும் குழியுமான சாலைகள்,செயல்படாத உயர்கோபுர மின்விளக்குகள்,விபத்துகளால் சாலையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள்,பராமரிக்கப்படாததால் மண்மேடாகி கிடக்கும் சாலைகள்,தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால் சாலையில் சிதறியிருக்கும் குப்பைகள் என எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தில் எல்லைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலை நரக வழிச்சாலையாக மாறிக் கிடக்கிறது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் சமயத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிட ஆம்புலன்ஸ் வாகனம்,விபத்தில் நொறுங்கி கிடக்கும் வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்திட ராட்சத கிரேன் மற்றும் சாலை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்திட ஹைவே பேட்ரோல் எனப்படும் ரோந்து வாகனம் ஆகியவை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் 24மணி நேரமும் இயங்கி வந்தது.இதன் மூலம் விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடி மருத்துவ உதவியும்,விபத்தில் சிக்கும் வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பும் வெகுவாக குறைந்து இருந்தது.இதனிடையே கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக கப்பலூர் டோல்கேட் சார்பில் இயக்கப்பட்டு வந்து ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகனங்கள் திடீரென்று தங்களது சேவையை நிறுத்தி விட்டு மாயமாகிவிட்டது.இதன் காரணமாக திருமங்கலம் பகுதி நான்குவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.தற்போது திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்திடும் விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றிட அரசின் 108 இலவச ஆம்புலன்சுகள் மட்டுமே பயன்படுத் தப்பட்டு வருகிறது.
கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளின் உடந்தை போன்ற காரணங்களால் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகனங்கள் மாயமாகி விட்டதாக வாகனஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே மாபெரும் விபத்து எற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன.ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கப்பலூர் டோல்கேட்டில் ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகன வசதிகளை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கப்பலூர் டோல்கேட்டை அடிக்கடி கடந்து சென்றிடும் மத்திய அமைச்சர் இதனை கவனிப்பாரா?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.