எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் நாளை இளைஞர் பெருவிழா நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 69 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அருகே ரிங்ரோடு அம்மா திடலில் நாளை 5 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு 25 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் அம்மாவின் 69 - வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெறுகிறது. இந்த இளைஞர் பெருவிழாவில் 100 - கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் 100 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறுகிறது. இதில் 10,000 இளைஞர்கள் பங்கேற்கின்றனர் .
மேலும் உலகளவிலும், தேசிய அளவிலும், மாநிலஅளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டுத்துறையில் தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் உட்பட 25,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை வழங்குகிறார்.
முன்னதாக நாளை காலை 8 மணி முதல் இந்த இளைஞர் பெருவிழா நடைபெறும் மைதானத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்களுக்கு அதே இடத்தில் தேர்வு செய்யப்பட்டு 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைத்திறன் போட்டிகளும் நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பகல் 1 மணியளவில் கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்துகிறார். அதனை தொடர்ந்து அதே இடத்தில் இளைஞர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். மக்களை தேடி அரசு என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு அ.தி.மு.க.அரசு இன்றைக்கு மக்களை தேடி முதல்வர் என்ற நிலையில் இங்கு வருகிறார். இதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள், 25 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார். கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2 ம் பரிசாக ரூ.50,ஆயிரமும், 3 ம் பரிசாக ரூ.40 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 5 ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் கிராம, மாநில, மாவட்ட தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இலவச சீருடைகள், பதக்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாற்றுதிறனாளி வீரர்களுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி, மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
சித்திரை பெருவிழா எப்படி மதுரைக்கு புகழ்பெற்றது போல் இந்த இளைஞர் பெருவிழா மதுரை மக்களுக்கு ஒர் பயனுள்ள விழாவாக அமையும். மக்களைத்தேடி அரசு என்று நிர்வாகத்தை அம்மா உருவாக்கினார். தற்போது அம்மாவின் வழியில் மக்களைத்தேடி முதலமைச்சர் வருகிறார். எனவே இந்த இளைஞர் பெருவிழா ஒரு சித்திரை திருவிழாவை போல நடைபெறுகிறது. எனவே இந்த விழாவில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் . இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.