எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளே இல்லாத உன்னத இலக்கை அடைகின்ற வகையில் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பெருமிதம்
வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 10மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வீடில்லாத அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக அலுவலர்களிடம் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலும், ஆலோசனையினையும் வழங்கி தெரிவித்ததாவது,
தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலம்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியுடன் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அம்மா இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவ்க்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும் அம்மா வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் 2,46,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதுடன் இதில் 1,00,000வீடுகள் பணி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு அதிகளவு வீடுகட்டி கொடுத்த மாநிலமாக தமிழகம், முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
வீடில்லா குடும்பங்களுக்கு
கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசின் நிதியுதவித்திட்டத்தின் கீழும் மற்றும் மத்திய அரசு நிதியுதவித்திட்டத்தின் கீழும் கட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10லட்சம் மதிப்பீட்டில் முழு மான்யத்துடன் வீடு கட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. வீட்டுமனை இடமிருந்தால் போதும், உடனடியாக வீடுகட்ட உரிய ஆணை வழங்கப்படும் அதுமட்டுமின்றி வீடு கட்டவோர்க்கு எளிய வகையில் மான்ய விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் திருமணமாகியிருந்தால் அவர்களுக்கு வீடு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு வசிக்கும் வீட்டின் மாடியிலே வீடு கட்ட அதற்கும் ரூ.2.10லட்சத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது. அதேபோல், சிலப்பகுதிகளில் இடம் இல்லாத நிலையை கருத்தில்கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், அரசு மான்ய தொகையை விட கூடுதலாக செலவுசெய்து வீடு கட்டுவோர்களுக்கு, ரூ.6.00லட்சம் வரை குறைந்த வட்டியில் மான்ய கடனும் வழங்க்பட்டு வருகின்றது. இதுபோல் ஏழை எளிய வீடில்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்கள் முழுமையாக அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாhர்.
தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசைப்பகுதிகளில்லா மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை ஜீன் 2015-ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட நான்கு வகைப்பாடுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. குடிசைப்பகுதிகள் அமைந்துள்ள இடத்திலேயே மறுமேம்பாட்டு திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ.1.00 இலட்சம்) 2. வீடு கட்ட / வாங்க பெறப்படும் கடனில் வட்டி சலுகை திட்டம் (3மூஇ4மூ ரூ 6.5மூ வட்டி சலுகை) 3. மக்களின் சக்திகேற்ப வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம்- ரூ.1.50 இலட்சம், மாநில அரசு மானியம் ரூ.5.00 இலட்சம் வரை) 4. பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ1.50 இலட்சம், மாநில அரசு மானியம் - ரூ.0.60 இலட்சம்).
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை மாநில ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்து உள்ளது. வழிகாட்டுதல் நெறி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வீட்டு வசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்றுள்ளது. கணக்கெடுப்பின்படியும் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படியும் 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஓப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை ரூ.8660.06 கோடி மதிப்பீட்டில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்டங்கள் அளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் மண்டல அளவில் கலந்தாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரை, திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் ஏற்கணவே கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கோயம்புத்தூர் சரகத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வீடுகள் தேவையென கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2766.58கோடி மதிப்பீட்டில் 77,517 வீடுகள் கட்ட திட்டபிரேரணைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியொதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்களும் அதிகளவில் பண்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.செல்வராஜ், ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், கஸ்தூரிவாசு, குணசேகரன், முருகன், சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.