எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்ரா பவுர்ணமியையட்டி கிரிவல பக்தர்களுக்கு செய்து தரப்படவுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தற்காலிக பேருந்து நிலையங்களை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிறப்புபேருந்து
திருவண்ணாமலையில் சித்தர்கள் வலம் வருவதாக நம்பப்படும் சித்ரா பவுர்ணமிநாளில் வரும் 10ந் தேதி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. பல சிறப்புகள் வாய்ந்த சித்ரா பவுர்ணமி, ஹேவிளம்பி ஆண்டான இந்த ஆண்டு நாளை 9ந் தேதி (செவவாய்கிழமை) பின்னிரவு 12.09 மணிக்குமேல் தொடங்கி மறுநாள் 10ந் தேதி (புதன்கிழமை) பின்னிரவு 3.05 மணிக்கு முடிவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவில் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களிலிருந்துவரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளனர். பயணிகள் வசதிக்காக 35 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி பக்தர்களின் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக 42 குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆவீன் நிறுவனத்தின் சார்பாக 16 இடங்களில் பால் மோர் லசி போன்றவை விற்பனை செய்யும் கடைகள் இயங்கப்படவுள்ளது. கிரிவலப் பாதையில் 37 இடங்ககளில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையின் சார்பில் பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் 18 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் 85 இடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2900 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தி.மலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேற்று மாலை 6 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திண்டிவனம் சாலையிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும், அண்ணாமலையார் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, உதவி கண்காணிப்பாளர் ரவளிபிரியா, கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா, நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் இரா.இரவி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள -
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.