எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர் நன்னடத்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே வேலைவாய்ப்பு வழகாட்டி நிகழ்ச்சியை நடத்த வுள்ளனர்.
பாட புத்தகங்கள்
தமிழகத்தில் 2017-18ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கியது. பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கான புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 330 மாணவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில படிக்கும் 43 ஆயிரத்து 589 மாணவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 919 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கூடுதல் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். எனவே கற்பி, தெளிவாக்கு, மேம்படுத்து என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பெற்றோர் மத்தியில் விநியோகம் செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வகுப்பு தொடக்கத்தில் இருந்தே தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக மாணவர்கள் வகுப்புக்கு வருகை தருவதை காலை, பிற்பகல் மற்றும் மாலையில் உறுதிபடுத்தவுள்ளனர். இதனை வகுப்பாசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆகியோர் கண்காணிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் நன்னடத்தை குழு அமைக்கவுள்ளனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் மாணவர்களின் நடத்தைகளை ஆய்வு செய்வதுடன் அதை சரி செய்ய முயற்சி மேற்கொள்வார்கள். மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்கவும், அறிவியல், கணித குழுக்கள் ஏற்படுத்தப்படும். பெற்றோர் இல்லாத மாணவர்களை ஆசிரியர் பராமரிப்பில் படிக்க வைக்கவுள்ளனர்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாள்தோறும் தேர்வுகள் நடத்தப்படும் அன்றைய தினமே தேர்வு தாளை திருத்தி பெற்றோரிடம் கையெழுத்து பெறவுள்ளனர். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் பாடங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பி மாணவர்கள் விளக்கம் பெறவேண்டும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறும்போது மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான அனைத்து திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம் அரசு பொதுத் தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து வரும் ஆண்டுமுதல் 5 இடங்களுக்கு இடம்பெற முயற்சி செய்வோம். அரசு சார்பில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி இம்மாதம் இறுதியில் நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்களுக்கான எதிர்கால இலக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.