எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-திருப்புல்லாணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ஒருங்கிணைந்த ஊரக பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக் கட்டடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். அதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாட்களில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள், சாதனைகள் குறித்த சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டார். விழாவிற்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, பள்ளி செல்லும் மாணவ, மாணவியரின் நலனுக்காக எண்ணற்ற மாணவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறையினை மேம்படுத்திடும் விதமாகவும், மாற்றுக் கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டும்படியாக ஏராளமான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறையின் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.
மேலும், தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில் 5லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.26 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய கட்டிடப் பணிகளும், ரூ.141 லட்சம் மதிப்பில் 171 பள்ளிக் கட்டிட மராமத்துப் பணிகளும், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.129.80 லட்சம் மதிப்பில் 11 புதிய வகுப்பறை கட்டிட பணிகளும், ரூ.101 லட்சம் மதிப்பில் 126 பள்ளிக் கட்டிட மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர மதிய உணவு திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பில் 48 பள்ளிகளில் புதிய சமயலறை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடமும், ரூ.235 லட்சம் மதிப்பில் பல்வேறு அடிப்படை தேவையுள்ள கட்டிடப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 12 இடங்களில் அங்கன்வாடி கட்டிடங்களும், 4 இடங்களில் நியாய விலைக்கடைகளும் உள்ளடக்கம் ஆகும். குறிப்பாக எனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உச்சிப்புளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர், மிதிவண்டி நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளும், ராமநாதபுரம் நகரில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் பென்ஞ்ச், மேசை உள்ளிட்ட தளவாட சாமான் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக் கல்லூரி அமைத்திட உத்தரவிடப்பட்டு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு விவசாயக் கல்லூரி அமைப்பதற்கு வலியுறுத்தி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஐ.ரோஜா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.