எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,0- மதுரையில் 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழா இந்தியாவே திரும்பிபார்க்கும் வகையில் மாபெரும் விழாவாக அமைய வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை ஏற்று பேசினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசின் சார்பில் 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெறுவதையொட்டி அதன் தொடக்க விழா மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறுகிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமா செல்லூர் கே.ராஜு தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மருதராஜ், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ராஜாங்கம், மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர் கே.துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, பகுதி செயலாளர்கள், ஏ.கே.முத்துஇருளாண்டி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.எஸ்.செந்தில்குமார், எம்.ஜெயபால், தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், என்.முருகன், கே.ஜெயவேல், பூமிபாலகன், பைக்காரா பி.கருப்புசாமி, பரவை ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி.ஜெபாலன், கா.டேவிட்அண்ணாத்துரை, பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ரமணி, மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், மற்றும் கிரம்மர்சுரேஷ், சண்முகவள்ளி, சக்திமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தான் முதன் முதலாக நடைபெறும் என்று கூறினார். அதன் படி மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதனை தொடர்ந்து 32 வருவாய் மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது மறைந்த முதல்வர் அம்மா எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அம்மாவின் விருப்பத்திற்கிணங்க சிறப்பாக நடைபெறுகிறது இந்த நூற்றாண்டு விழா இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என்றார்.
அமைச்சர் காமராஜ் பேசியதாவது
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் என்றும் நிலையாக நிற்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது அம்மாவின் லட்சியமாகும் 100 ஆண்டு காலம் அதிமுக மக்கள் பணி ஆற்றும் வகையில் இந்த பிறந்தநாள் விழா இருக்க வேண்டும் மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஒரு முன்னோடி விழாவாக திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் வருகின்ற 30ம் தேதி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இருக்கும் இது போன்று யாருக்கும் நடைபெறாத வகையில் இந்த விழா சிறப்பாக அமைய வேண்டும் மேலும் அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், சிறப்பாக நடைபெறுகிறது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்றை தினம்பரிசுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார் என்றார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது
அம்மாவின் எண்ணப்படி எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது அதன் தொடக்கமாக மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது அன்றைய தினம் அதிமுக தொண்டர்கள் தங்கள் குடும்ப சகிதமாக பங்கேற்று நம் தெய்வம் எம்ஜிஆருக்கு குடும்ப விழாவாக நாம் கொண்டாட வேண்டும் மதுரையில் நடைபெற்ற விழாவைப்போல் வேறு எங்கேயும் நடைபெறவில்லை என்ற வரலாற்றை நாம் பெற்றிட வேண்டும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் கடல் அலைபோல் திரண்டு இருப்பதை பார்த்து இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்பது போல் உள்ளது அம்மாவின் மருத்துவமனை செலவிற்காக அதிமுக சார்பில் ரூ.6 கோடி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் மக்கள் சக்தி என்றால் அம்மா மகா சக்தி ஆவார். எம்ஜிஆர் படத்திலும் சரி, அம்மா படத்திலும் சரி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி மக்களை நல்வழிப்படுத்தினார்கள் அதே போல் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் இருந்தது அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தலில்எம்ஜிஆர் மாயத்தேவரை களமிறக்கி மாபெரும் சரித்திரம் படைத்தார்.
எம்ஜிஆரும், அம்மாவும் மதுரை மக்களை என்றும் மறந்தது இல்லை அவர்கள் இருவரது அரசியல் வாழ்விலும் மதுரை இணைந்து தான் இருந்தது இந்த மதுரை மண்ணில் தான் எம்ஜிஆர், அம்மாவிற்கு செங்கோல் வழங்கினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது தான் மதுரையாகும், மேலும் வெற்றி விழாவும் மதுரையில் தான் நடத்தப்பட்டது அதிமுகவிற்கும் மதுரைக்கும் பல்வேறு பெருமைகள் உண்டு ஏனென்றால் பல்வேறு காலகட்டங்களில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மதுரையில் தான் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை மதுரையில் நடத்த அம்மா விரும்பினார்கள். தற்போது அம்மாவின் எண்ணப்படி எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் நடைபெற உள்ளது அதன் முதல் தொடக்கவிழா அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இந்த விழாவை இந்தியாவே எதிர்நோக்கிகொண்டிருக்கிறது இந்த விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்
விதையை விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை எனவே அதிமுகவை யாரும் அசைக்க முடியாது அதிமுகவிற்கு எப்போதும் வெற்றிடம் இல்லை 100 ஆண்டுகள் ஆனாலும் நமக்கு தோல்வி என்பதே கிடையாது ஏனென்றால் அம்மாவின் ஆன்மா எப்போதும் நமக்கு உதவிசெய்துகொண்டே இருக்கும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கூட்டம் ஒரு மாநாடு போல் உள்ளது இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் உள்ளனர் ஆனால் எம்ஜிஆருக்கும், அம்மாவிற்கும் உள்ள மக்கள் செல்வாக்கு யாருக்கும் கிடையாது 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது அதே போல் 2011ல் தி.மு.க.தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தை ஆள முடியாது. அம்மா லட்சியம் கொண்ட இந்த இயக்கம் தான் இன்னும் 100 ஆண்டுகள் ஆளும்
பொதுவாக தலைவர்கள் மறைந்தால் அந்த இயக்கமும் மறையும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவிற்குப்பின்னும் இந்த இயக்கம் மக்கள் பணியை ஆற்றி வருகிறது அதே போல் அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த இயக்கம் மக்கள் பணி ஆற்றி வருகிறது ஏனென்றால் இந்த இயக்கத்திற்காக விதைத்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து மக்கள் பணி ஆற்றி வருகிறது அதற்கு காரணம் எம்ஜிஆரும், அம்மாவும் ஆகும்.
அதிமுகவை பற்றி பல்வேறு பத்திரிக்கைகள் விமர்சனம் செய்து செய்திகளை போட்டுவந்தனர் தற்போது அதிமுகவை பாராட்டி செய்திகள் போட்டு வருகின்றனர் ஏனென்றால் அதிமுக சார்பில் பிரமாணபத்திரங்கள் அதிக அளவில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அந்த பிரமாண பத்திரத்தை வைக்க இடமில்லாத வகையில் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் நிச்சயம் நமக்கு வரும் அது வெகு தொலைவில் இல்லை அது எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக அதிமுகவிற்கு கிடைக்க அம்மாவின் ஆத்மா நமக்கு நிச்சயம் உதவி செய்யும் .
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் ஸ்டாலின் சட்டசபையில் விதிகளுக்கு புறம்பாக பல்வேறு கூச்சல் குழப்பங்களை செய்து வருகிறார். அதை மக்கள் நன்கு கவனித்துதான் வருகின்றனர் அதே போல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலிலும் லஞ்சம் கொடுத்தோம் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வேட்பாளர் என்ன செய்தாரோ அதையேதான் நாங்களும் செய்தோம் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தோம், ஓட்டுகேட்டோம் வேறு எந்த குறுக்கு வழியில் நாங்கள் செல்லவில்லை அதில் வெற்றி கிடைக்கும் என்று தெரிந்து ஸ்டாலின் பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பினார்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மதுரையில் 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்கின்றனர் இந்த விழாவானது மதுரையில் மீண்டும் ஒரு சித்திரை திருவிழா போல் இருக்க வேண்டும் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் நமது தெய்வமாக இருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவானது ஒரு மாபெரும் சாதனை படைக்கும் விழாவாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.