எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 14- கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் போராடும் மக்களுக்கு பதில் சொல்லாமல் அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதா என்று மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அணுமின் நிலையம் பாதுகாப்பு அற்றது, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தும், உடல் நலக் கேடுகள் வராமல் தடுப்பதற்கும், ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் உரிய நஷ்ட ஈடு வழங்குவதற்கும் தயாராக இல்லாத நிலையில், தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் என அஞ்சுகின்ற மக்களின் போராட்டம் சரியானதுதான்.
இந்திய மின்துறையின் முன்னாள் செயலர் சர்மா அவர்கள், அப்துல் கலாம் அவர்கள் கூறிய கருத்துகளுக்குக் கடுமையான மறுப்புத் தெரிவித்து, கூடங்குளம் அணுமின் நிலையம், முழுவதும் பாதுகாப்பானது என்பதை மறுத்து உள்ளார். இந்நிலையில், தங்கள் உயிர்களுக்கும், வருங்காலத் தலைமுறையினரின் உடல்நலனுக்கும், பேராபத்து நேரும் என்ற காரணத்தால், கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள, லட்சக்கணக்கான மக்கள், தங்களை வருத்திக்கொண்டு போராடுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், தொடர்ந்து பட்டினிப்போரும் நடத்துகின்றார்கள். ஆனால், இந்தப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில், அதில் ஈடுபட்டு உள்ளவர்களைக் களங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி, பழிதூற்றும் எண்ணத்துடன், வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதல் என்று, அணுசக்தித்துறைத் தலைவர், ஒரு அக்கிரமமான குற்றச்சாட்டைச் சொன்னார். அது கிறித்துவ மிஷனரிகளின் பின்னதி என்று சிலர் நஞ்சைக் கக்கினார்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களுக்கு, எங்கிருந்தோ பணம் வருகின்றது; அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருப்பது, மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில், கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு, அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர். மக்கள் கோபத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, போராட்டத்தை நசுக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகின்றது.
இவ்வாறு வைகோ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்வாதாரங்களுக்கு கேடானது என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அவமதிக்கும், மிரட்டும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்க உதவுவோம் என்று கூறி, பிரதமர் அமைத்த நிபுணர் குழு, போராட்டக் குழுவினருடன் ஒரே ஒருமுறை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், போராட்டக்குழுவினரை மிரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது ஏன்? மத்திய அரசின் நிபுணர் குழுவிடம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு விவரங்கள் அனைத்தையும் அறிந்து மக்களுக்கு எடுத்துக் கூற, 60 வினாக்களை போராட்டக்குழுவினர் எழுப்பியுள்ளனர்.
இதற்கான பதிலை இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்து பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசின் நிபுணர் குழுவும் உறுதியளித்திருக்கிறது. இந்த நிலையில் நெல்லைக்கு வந்த நாராயணசாமி, போராட்டக்குழுவினர் கேட்ட முக்கியமான 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறியுள்ளார். 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் அடித்த இரண்டு லட்சம் கோடி ஊழல் பணம் எங்கே போனது என்பதை மத்திய அரசு கண்டு பிடிக்கட்டும். அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுவோர், போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசும் உங்களுக்கு எந்த அணு உலை தயாரிப்பு நிறுவனம் பணம் தருகிறது? அதற்கெல்லாம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறாரா நாராயணசாமி? கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்துப் பேச திராணியற்ற மத்திய அமைச்சர், போராடும் மக்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் அவதூறு பேசுவது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தால் அணு உலையின் ஆபத்து வெட்ட வெளிச்சமாகி விடும் என்ற அச்சத்தினால்தான் என்பது புரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.