எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 14 - மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.6.5 கோடி மதிப்புள்ள ஹெராயினை சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தனியார் விமான நிறுவனத்தின் பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்nullருக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் அனைவரிடமும் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பஸ்கள் மூலம் விமானம் அருகே அழைத்து வரப்பட்டனர்.
அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் ஏறுவதற்கு ஆயத்தமாகினர். அப்போது பயணிகளை ஏற்றி வந்த ஒரு பஸ்சின் டிரைவர், அங்கிருந்த மூன்று பேரிடம் ஒரு பார்சலை கொடுத்தார். இதைப் பார்த்த டிஆர்ஐ அதிகாரிகள், விரைந்து சென்று பயணிகளையும் பஸ் டிரைவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். பிரித்து பார்த்தபோது, அதில் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிடிபட்ட பயணிகளை உடனடியாக டிஆர்ஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது மசூர் (40), ஹத்தாரியா (35) என்ற பெண் மற்றும் இலங்கையை சேர்ந்த அப்துல் காதர் அலீம் (35) என்பதும், ஹெராயினை அவர்களிடம் ஒப்படைத்த பஸ் டிரைவர் வண்டலூர் வெங்கம்பாக்கத்தை சேர்ந்த பாலகுமார் (30) என்பதும் தெரியவந்தது.
பார்சலில் மொத்தம் 6 கிலோ 380 கிராம் ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும். அவர்கள் 4 பேரையும் கைது செய்து, தி.நகரில் உள்ள டிஆர்ஐ தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஹெராயினை கடத்த சொன்ன கிண்டியை சேர்ந்த ஜாகீர் (40), மணிகண்டன் (35) ஆகியோரை கிண்டி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனைகளை கடந்து போதைப் பொருள் கடத்தப்படுவதும், கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள். இதுபோன்ற கடத்தல்கள், சிறு அளவில்தான் நடந்து வந்தது. தற்போது ஏர்போர்ட்டில் பயணிகளை அழைத்து செல்லும் பஸ் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டு, விமானத்துக்குள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பிடிபட்டவர்களை அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையின்போது, பிடிபட்ட கடத்தல்காரர்கள் கூறியதாவது:
போதைப் பொருளை பணத்துக்காகவே கடத்தினோம். இதுபற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. சென்னை கிண்டியை சேர்ந்த ஜாகீர், மணிகண்டன் இருவரும்தான் எங்களிடம் இதை தந்தனர். கோலாலம்nullர் ஏர்போர்ட்டில் அவர்கள் சொன்னவரிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டு பார்சலை எடுத்து செல்ல ஒப்புக் கொண்டோம். பார்சலை விமானம் அருகே கொண்டு வந்து தருவதற்காக, பஸ் டிரைவரை அவர்கள்தான் ஏற்பாடு செய்தனர்.
விமான நிலைய பஸ் டிரைவர்கள் வருவதற்கென தனி வழி உள்ளது. அதன் வழியாகவே இந்த பார்சலை டிரைவர் உள்ளே எடுத்து வந்து பஸ்சில் வைத்தார். நாங்களும் அந்த டிரைவர் ஓட்டிய பஸ்சில் சென்று ஏறிக் கொண்டோம். விமானம் அருகே வந்தபோது, யாருக்கும் சந்தேகம் வராதபடி எங்களிடம் அந்த பார்சலை தந்தார். பத்திரமாக எங்களிடம் பார்சல் ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிந்ததும் ஜாகீரும் மணிகண்டனும் புறப்பட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு விஷயத்தில் அதிர்ச்சி
மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் 6 பேரை கைது செய்துள்ளோம். இதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளோம். சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் கைதான சம்பவம் பலமுறை நடந்துள்ளது. ஆனால், ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரின் நேரடி தொடர்புடன் நடந்த சம்பவம் இதுதான். சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக தனியார் விமான நிறுவன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் முதல் தீவிர சோதனை நடத்தி வந்தோம். இவ்வளவு பெரிய கடத்தல் கும்பல் பிடிபடும் என எதிர்பார்க்கவில்லை. விமான நிறுவன பஸ் டிரைவர்கள் ஏர்போர்ட்டுக்குள் வருவதற்கு தனி கேட் உள்ளது. அங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களை தீவிரமாக சோதனை செய்தபிறகே அனுப்புவார்கள். அடையாள அட்டையை பார்த்து, உடலை தடவிப் பார்த்துதான் அனுப்புவார்கள். அப்படி இருந்தும் எப்படி இந்த பார்சலை டிரைவர் எடுத்து வந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரிடம் சோதனை நடத்தவில்லையா என்பது பற்றியும் விசாரிக்கிறோம். இது பாதுகாப்பு சம்பந்தபட்ட விவகாரம். போதை பொருள் கடத்தி செல்வது போன்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை எடுத்து சென்றிருந்தால் என்னவாயிருக்கும். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜன் கூறினார்.
இந்த விவகாரத்தில் போதை பொருள் இதுபோல் எத்தனை முறை கடத்தப்பட்டுள்ளது. ஜாகீர்உசேன் தவிர வேறு பெறும் நெட்வொர்க் உள்ளதா? தனியார் விமான நிறுவன ஊழியர்கள் இதற்கு முன்பு இவ்வா கடத்தலில் ஈடுபட்டார்களா? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தீவிவரமாக விசாரித்து வருகின்றனர். செனனை விமான நிலையத்தில் ரூ.6 1/2 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.